பாகிஸ்தானின் கடத்தல் முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தானின் கடத்தல் முயற்சி முறியடிப்பு

1 mins read
182b0672-84f6-4be2-a224-6bdab9834652
-

குர்­தாஸ்­பூர்: பஞ்­சாப் மாநி­லத்­தை­யொட்­டிய பாகிஸ்­தா­னு­ட­னான எல்­லைப்­ப­கு­தி­யில் இந்­தி­யப் பாது­காப்­புப் படை­யி­னர் தீவி­ரக் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

நேற்று குர்­தாஸ்­பூ­ரில் உள்ள சந்து வாடாலா பகு­தி­யில் பாகிஸ்­தான் கடத்­தல்­கா­ரர்­க­ளுக்­கும் இந்­தி­யா­வின் எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­கும் இடையே துப்­பாக்­கிச் சண்டை நடை­பெற்­றது. அதில் எல்­லைப் பாது­காப்­புப் படை வீரர் ஒரு­வர் காய­ம­டைந்­தார். இருப்­பி­னும் கடத்­தல் முயற்­சியை அதி­கா­ரி­கள் முறி­ய­டித்­த­னர்.

சம்­ப­வத்­தில் பாகிஸ்­தான் கடத்­தல்­கா­ரர்­கள் தப்­பிச் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அந்­தப் பகு­தி­யில் இருந்து 47 பைகளில் சுற்றி வைக்­கப்­பட்­டி­ருந்த ஹெரா­யின், ஓபி­யம் போன்ற போதைப்பொருள்­கள் எனச் சந்­தே­கிக்­கப்­படும் பொட்­ட­லங்­கள்(படம்), துப்­பாக்­கித் தோட்­டாக்­கள் ஆகி­ய­வற்­று­டன் சீனத் துப்­பாக்கி, கைத்­துப்­பாக்கி, வெடி­ம­ருந்­து­கள், ஏகே 47 ரகத் துப்­பாக்கி உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளை­யும் எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர்.

மொத்­தம் 47 கிலோ ஹெரா­யின் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

குர்­தாஸ்­பூ­ரின் சந்து வடாலா சோத­னைச்­சா­வடி அருகே நேற்று அதி­காலை 5:15 மணிக்கு சந்­தே­கத்­திற்­கி­ட­மான வகை­யில் நட­மாட்­டம் காணப்­பட்­டதை எல்­லைப் பாது­காப்­புப் படை வீரர்­கள் கண்­ட­றிந்­த­னர். அதைத் தொடர்ந்து அவர்­கள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னர். பதி­லுக்­குக் கடத்­தல்­கா­ரர்­களும் சுடத் தொடங்­கி­னர்.

இறு­தி­யில் கடத்­தல்­கா­ரர்­கள் தங்­க­ளி­டம் இருந்த அனைத்­துப் பொருள்­க­ளை­யும் கைவிட்­டுத் தப்­பிச் சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

மோத­லில் காய­ம­டைந்த எல்­லைப் பாது­காப்­புப் படை வீர­ரின் உடல்­நிலை சீராக உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.