ரூ.2,800 கோடி மோசடி: கார்வி குழும நிர்வாகி கைது

2 mins read
fede3654-4678-446e-bff0-590ac9862137
-

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை; பெங்களூரு சிறையில் அடைப்பு

புது­டெல்லி: பங்­குச் சந்­தை­யில் 2,800 கோடி ரூபாய் அள­வுக்கு மோசடி செய்­தது தொடர்­பான குற்­றச்­சாட்­டின் பேரில் கார்வி குழு­மத்­தின் தலைமை நிர்­வாக இயக்­கு­நர் கோமாண்­டூர் பார்த்­த­சா­ரதி கைதாகி உள்­ளார். அவர் அந்­நி­யச் செலா­வணி மோச­டி­யி­லும் ஈடு­பட்­ட­தா­கப் புகார் எழுந்­துள்­ளது.

இதை­ய­டுத்து கார்வி குழு­மத்­தின் தலைமை நிதி அதி­காரி கிருஷ்ணா ஹரி­யை­யும் காவல்­துறை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

இந்­தக் குற்­றச்­சாட்­டு­களை அடுத்து கார்வி நிறு­வ­னம், பார்த்­த­சா­ர­தி­யு­டன் தொடர்­பு­டைய சுமார் 700 கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­களை அம­லாக்­கத்­துறை முடக்கி உள்­ளது.

முத­லீட்­டா­ளர்­கள் பல­ரது முத­லீ­டு­கள் மூலம் திரட்­டப்­பட்ட ரூ. 2,874 கோடியை வேறு பணி­க­ளுக்கு சட்ட விரோ­த­மா­கப் பயன்­ப­டுத்­தி­னார் என்­பது பார்த்­த­சா­ரதி மீதான குற்­றச்­சாட்டு. மேலும் தன் நிறு­வ­னத்­தின் பங்­கு­களை வங்­கி­களில் அடகு வைத்து கடன் பெற்று அதன் மூலம் அந்­நி­யச் செலா­வணி மோச­டி­யில் ஈடு­பட்­ட­தா­க­வும் மற்­றொரு குற்­றச்­சாட்டை அவர் எதிர்­கொண்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், பார்த்­த­சா­ர­தி­யை­யும் ஹரி­யை­யும் காவல்­துறை பெங்­க­ளூரு மத்­திய சிறை­யில் அடைத்­துள்­ளது. இரு­வ­ரும் அம­லாக்­கத்­து­றை­யால் மீண்­டும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். பின்­னர் போலிஸ் காவ­லில் வைத்து இரு­வ­ரும் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­க­ளால் விசா­ரிக்­கப்­பட்­ட­னர்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதமே கார்வி நிறு­வ­னத்­து­டன் தொடர்­புடைய இடங்­களில் அம­லாக்­கத்­துறை சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­போது பல முறை­கேடு­கள் நடந்­தி­ருப்­பது அம்­ப­ல­மா­னது. இதை­ய­டுத்து அந்­நி­று­வ­னத்­தின் மூத்த அதி­கா­ரி­கள், ஊழி­யர்­களி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டன.

மிக­வும் சிக்­க­லான முறை­யி­லும் எளி­தில் கண்­டு­பி­டிக்க முடி­யாத வகை­யி­லும் சில அதி­கா­ரி­கள் பண மோச­டி­யில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் முத­லீட்­டா­ளர்­க­ளின் பணத்தை இதற்­குப் பயன்­ப­டுத்­தி­ய­தும் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இம்மோச­டி­யில் கார்வி நிறு­வ­னத் தலைமை நிர்­வாக இயக்­கு­ந­ருக்­கும் பங்­குள்­ளது அம­லாக்­கத்­துறைக்கு அதிர்ச்சி அளித்­துள்­ளது.

வங்­கி­களில் பெற்ற கடனை அந்­நி­யச் செலா­வணி நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தி­ய­தும் இதற்­காக 14 போலி நிறு­வ­னங்­கள் உரு­வாக்­கப்­பட்­ட­தும் தெரி­ய­வந்­துள்­ளதை அடுத்து, வங்­கி­கள் அல்­லாத பிற நிதி நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்­தும் ரூ. 400 கோடியை கார்வி குழு­மம் கட­னா­கப் பெற்­றுள்­ளது என்­ப­தை­யும் அம­லாக்­கத்­துறை கண்­டு­பி­டித்­துள்­ளது.