ஹெலிகாப்டர் தரையிறக்கம்: அகிலேஷ் புகார்

ஹெலிகாப்டர் தரையிறக்கம்: அகிலேஷ் புகார்

2 mins read
afbdf360-a617-43b0-a520-0eaf5f6eb779
தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர் முன் அகிலேஷ். படம்: ஊடகம் -

லக்னோ: தோல்வி பயம் கார­ண­மாக பாஜக தலைமை சதிச் செயல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக சமாஜ்­வாடி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் யாதவ் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

தேர்­தல் பிர­சார நட­வ­டிக்­கை­களுக்­காக டெல்­லி­யில் இருந்து உத்­த­ரப் பிர­தே­சத்­துக்கு ஹெலி­காப்­ட­ரில் தாம் பய­ணம் மேற்­கொள்ள எந்­த­வித கார­ண­மும் இன்றி அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் எதிர்­வ­ரும் பிப்­ர­வரி 10 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்­டங்­க­ளாக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளதை அடுத்து அர­சி­யல் கட்­சி­கள் தீவிர பிர­சா­ரத்தை தொடங்கி உள்­ளன.

இந்­நி­லை­யில் சமாஜ்­வாடி கட்­சி­யும், ராஷ்ட்­ரீய லோக் தள் கட்­சி­யும் தேர்­த­லுக்­காக கூட்­டணி அமைத்­துள்­ளன. இரு கட்­சித் தலை­வர்­களும் இது தொடர்­பாக நேற்று செய்­தி­யா­ளர்­களைச் சந்திப்­ப­தா­க­வும் அதை­ய­டுத்து பிர­சா­ரம் மேற்­கொள்ள இருப்­ப­தா­க­வும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்காக நேற்று டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உத்தரப் பிரதேசம் செல்ல இருந்தார் அகிலேஷ் யாதவ். ஆனால் அவர் சென்ற ஹெலிகாப்டர் வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் டெல்லியிலேயே தரையிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் ஆளானார். இதனால் கோபமடைந்த அவர், தமது பயணம் பாதிக்கப்பட பாஜக சதி வேலைதான் காரணம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தம்மால் குறித்த நேரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க மு டியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவுக்கு தோல்விப் பயம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

"எந்தவித காரணமும் இன்றி எனது ஹெலிகாப்டர் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. எனக்கு அனுமதி அளிக்காத அதேநேரம் பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவருக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"என்னுடைய ஹெலிகாப்டர் பாதி வழியிலேயே தரையிறக்கப்பட்டதற்கு பின்னால் இருப்பது பாஜகதான் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் செயல்," என அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.

எனினும் அவரது இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்க இயலாது என்றும் அகிலேஷ் ஆதாரமின்றி குற்றம்சாட்டுவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.