மகாராஷ்டிரா: பெண் காவலர் பணி நேரம் குறைப்பு

மகாராஷ்டிரா: பெண் காவலர் பணி நேரம் குறைப்பு

1 mins read
ca5da0c7-db86-4aed-8745-c82b12f26918
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் பெண் காவ­லர்­க­ளுக்குச் சிறந்த வேலை, வாழ்க்­கையை வழங்­கும் கொள்கை­யின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளின் பணி நேரம் தின­மும் 12 மணி நேரம் என்­ப­தில் இருந்து 8 மணி நேர­மாக குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­நில காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

மகாராஷ்டிர காவல்­துறை தலை­வர் டிஜிபி சஞ்­சய் பாண்டே தமது உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மூத்த அதி­கா­ரி­களிடம் தெரிவித்துள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் தற்­போது மாநில பெண் காவ­லர்­க­ளின் பணி நேரம் தின­மும் 12 மணி நேர­மாக உள்­ளது.

சில சம­யங்­களில் அதை­யும் கடந்து பணி நேரம் நீட்­டிக்­கப்­படு­வ­தா­க­வும் இத­னால் குடும்ப வாழ்க்கை பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­கள் காவல்­துறை தலை­வ­ரி­டம் கடி­தம் வழி முறை­யிட்­ட­னர்.

இதை­ய­டுத்து மூத்த அதி­காரி­க­ளு­டன் ஆலோ­சித்து பணி நேரத்­தைக் குறைக்க உத்­த­ர­விட்­டுள்­ளார் டிஜிபி சஞ்­சய் பாண்டே.