புதுடெல்லி: வெள்ளிக்கிழமை அன்று ஏர் இந்தியா விமான நிறுவனமானது டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது விமான உள் அறிவிப்பின் மூலம் பயணிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 69 ஆண்டுகளுக்குப் பிறகு, டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதை விமானப் பயணிகளுக்குத் தெரியப்படுத்தும் விதமாக ஏர் இந்தியா விமானங்களில் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.
"இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விமான பயணத்தில் உங்களை வரவேற்கிறோம். இது ஒரு சிறப்பு நிகழ்வைக் குறிக்கிறது. ஏர் இந்தியா எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதிகாரபூர்வமாக டாடா குழுமத்தின் ஓர் அங்கமாகிறது.
"ஒவ்வோர் ஏர் இந்தியா விமானத்திலும் புதிய அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். இந்தப் பயணத்தில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறோம், நன்றி," என விமானிகள் அறிவிப்பில் குறிப்பிட்டனர்.

