டெல்லி: பாதிப்பு குறைந்தது; திரையரங்குகள் திறப்பு

டெல்லி: பாதிப்பு குறைந்தது; திரையரங்குகள் திறப்பு

1 mins read
c5f2ba2e-fab3-4793-9cec-bad0d32828c3
-

புது­டெல்லி: டெல்­லி­யில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோர் அன்­றாட எண்­ணிக்கை ஐந்­தா­யி­ரத்­துக்­கும் கீழ் பதி­வா­னது.

இந்­நி­லை­யில், அங்கு ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. இதை­ய­டுத்து, திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டுள்­ளன.

இதற்­கி­டையே, கேர­ளா­வில் தொற்று எண்­ணிக்கை குறை­வ­தா­கத் தெரி­ய­வில்லை. அம்­மா­நி­லத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக மேலும் 54 ஆயி­ரம் பேருக்கு கிருமி தொற்­றி­ய­தாக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் நேற்று முன்­தினம் 235,000 பேருக்கு புதி­தாக கிருமி தொற்றி உள்­ளது. மேலும், 871 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

ஆசி­யா­வின் மிகப்­பெ­ரிய குடிசைப்­ப­கு­தி­யாக கரு­தப்­படும் மும்­பை­யில் உள்ள தாராவி பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் ஒரு­வ­ருக்­குக்­கூட தொற்று ஏற்­ப­ட­வில்லை.

இதற்கிடையே, கர்நாடகாவில் கொரோனா நெருக்கடியால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.