முதலமைச்சர்-ஆளுநர் பனிப்போர் முற்றுகிறது

முதலமைச்சர்-ஆளுநர் பனிப்போர் முற்றுகிறது

2 mins read
631410d2-b4f0-48b8-8095-1a8034f4b7a4
-

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநி­லத்­தில் முத­ல­மைச்­சர் மம்தா பானர்­ஜிக்­கும் ஆளு­நர் ஜக்­தீப் தங்­க­ருக்­கும் இடை­யில் நீண்ட நாட்­க­ளாக நீடித்து வரும் பனிப்­போர் முற்றி வரு­கிறது.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் துணை­வேந்­தர் நிய­ம­னம் தொடர்­பாக இரு­வ­ருக்­கும் இடையே சர்ச்சை ஏற்­பட்­டது. தமது ஒப்­பு­த­லின்றி மாநில அரசு துணை­வேந்­தர்­களை நிய­மிப்­ப­தாக ஆளு­நர் குற்­றம் சாட்டி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், மகாத்மா காந்­தி­யின் 74வது நினைவு தினத்தை முன்­னிட்டு கோல்­கத்­தா­வில் உள்ள அவ­ரது நினை­வி­டத்­தில் ஆளு­நர் ஜக்­தீப் தங்­கர் நேற்று மலர்­தூவி மரி­யாதை செலுத்­தி­னார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "தனிப்­பட்ட நப­ரின் விருப்­பத்­தின்­படி செயல்­ப­டா­மல், சட்­டத்­தின்­படி செயல்­ப­டும்­போது மட்­டுமே ஜன­நா­ய­கம் தழைத்­தோங்­கும். அவர் (மம்தா பானர்ஜி) இத­னை உண­ரு­வார் என்று நம்­பு­கி­றேன். அர­சி­யல் சாச­னத்­தில் தெரி­வித்­துள்­ள­படி ஆளு­ந­ரு­டன் அமர்ந்து மாநில வளர்ச்சி குறித்து ஆலோ­சனை மேற்­கொள்ள வேண்­டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.

அர­சி­யல் சாச­னத்­தின்­படி, ஆளு­ந­ருக்கு முதல்­வர் தக­வல்­களை அளிக்க வேண்­டும். ஆனால், நான் ஆளு­ந­ரா­கப் பொறுப்­பேற்­ற­தில் இருந்து அவர் இது­வரை அப்­படி நடந்து கொள்­ள­வில்லை," என்று பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சாட்­டி­னார் ஜக்­தீப் தங்­கர்.

தொடர்ந்து, கடந்த வியா­ழக்­கி­ழமை 'பெகா­சஸ் விவ­கா­ரம், கொரோனா பெருந்­தொற்று, மேற்கு வங்­கா­ளத்­தின் உல­க­ தொழில் கூட்­ட­மைப்பு மாநாடு, மேற்கு வங்­காள ஏரோட்­ரோ­போ­லிஸ் திட்­டம், கூர்­கா­லாந்து நில நிர்­வா­கம், மாநில நிதி ஆணை­யம்' உள்­ளிட்­டவை குறித்த தக­வல்­களை முதல்­வர் மம்­தா­வி­டம் ஆளு­நர் கேட்­டி­ருந்­தார். அதற்கு மம்தா பதில் அளிக்­காத நிலை­யில் ஆளு­நர் நேற்று கொதிப்­பு­டன் பேசி­னார்.