புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதன்படி நேற்று தமது 85வது மன் கி பாத் உரையை ஆற்றினார். இது இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண்னின் செயல் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
"அவருக்குச் சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டு
களாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது.
"அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியின் உள்கட்டமைப்பை மேற்கொள்ள இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனைச் செய்வதற்கு மிகப்பெரிய மனதும் சேவை செய்யும் எண்ணமும் தேவை," என்று தாயம்மாளைப் புகழ்ந்தார்.

