பெங்களூரு: இந்தியாவில் கிருமிப் பரவல் காரணமாக கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் இருவிதமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜனவரி 7ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.
இதையடுத்து கர்நாடகாவில் கொரோனா 3வது அலை குறையத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த அலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இதற்கிடையே தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முதல்வர் பசவராஜ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. மேலும் பெங்களூரு நகரில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
திருமண நிகழ்வில் அதிகமாக 300 பேர் வரை மட்டுமே பங்கேற்க லாம் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளைப் பயன் படுத்தலாம் என்ற உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் அண்டை மாநிலமா கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஞாயிறு முழு முடக்கம் அமலில் இருந்து வருகிறது.
இதனால் தமிழ்நாட்டிலிருந்து கன்னியாகுமரி வழியாகச் செல்லும் வாகனங்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 2வது வாரமாக ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளான மருந்து, காய்கறிக் கடைகள் மற்றும் பால் விற்பனை மையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
மருத்துவம், விமான நிலையம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை களுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன

