லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் பிரபல முஸ்லிம் தலைவரான மவுலானா தவ்கீர் ரசா கானின் மரு மகள் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் முத்தலாக் ரத்து செய்யப் பட்டதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இத்தேஹத்-இ-மில்லத் கவுன்சில் என்ற கட்சியை நடத்தி வரும் மவுலானா தவ்கீர் ரசா கான், காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
இவரது மருமகள் நிடா கான் நேற்று முன்தினம் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார் என்று இந்திய ஊடகமான 'இந்து தமிழ்' தெரிவித்தது.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய நிடா கான், "மும்முறை தலாக் (முத்தலாக்) சொல்லும் முறையை ரத்து செய்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தவர் பிரதமர் மோடி என்றார்.
"அவரது சிறப்பான ஆட்சியால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அவரது ஆட்சி மீது நம்பிக்கை வைத்து நாங்கள் பாஜகவில் சேர்ந்துள்ளோம். எனவே முஸ்லிம் பெண்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம். இம்முறையும் உபியில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
"என்னுடைய மாமனார், பெண்கள் உரிமை குறித்து வெளியே மட்டுமே பேசி வருகிறார். காங் கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை தனது சகோதரியாக நினைத்து அவர் காங்கிரசுக்கு பிரசாரம் செய்து வருகிறார்.
"ஆனால் தன்னுடைய வீட்டில் உள்ள பெண்கள் உரிமை குறித்து அவர் சிந்தித்ததே இல்லை." என்றும் நிடா கான் கூறியுள்ளார்.

