செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
baf3258d-cd80-4fd6-ac84-1fcfcdbc4c87
-

'ஊழலை ஒழிக்க வேண்டும்'

புதுடெல்லி: இந்தியாவில் ஊழல் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி அறைகூவல் விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த 85வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, "ஊழலை ஒழிக்க ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் தோள் கொடுக்க வேண்டும். ஊழல் கரையான்போல் நாட்டை அழித்துவிடும். இந்தியாவில் ஊழல் நுழைய முடியாத சூழலை உருவாக்க வேண்டும்," என்று வலியறுத்தினார்.

ஏழுமலையானுக்கு ஒரே நாளில்

ரூ.2.30 கோடி வருமானம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சனிக்கிழமை அன்று 28,234 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,466 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். இந்த நிலையில் அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 30 லட்சம் கிடைத்தது (S$ 415,000) என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொதிகைக்கு புதுப் பொலிவு

சென்னை: 'பொதிகை' ஒளிவழி புதுப்பொலிவு பெறும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஞாயிறு அன்று பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியைக் காண்பதற்காக அவர், சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்தார். அப்போது பேசிய அமைச்சர் எல். முருகன், புதிய நிகழ்ச்சிகளுடன் எச்டி வடிவில் பொதிகை தமிழ் ஒளிவழி மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இறந்தவருக்குத் தடுப்பூசி

போட்டதாக குறுந்தகவல்

தும­கூரு: கர்­நா­டக மாநி­லத்­தில் தும­கூரு சிற்றூரைச் சேர்ந்த 80 வயது பசப்பா என்­ப­வர் உடல்­ந­லக்­கு­றைவால் பாதிக்­கப்­பட்­டு கடந்த 2021ல் உயி­ரி­ழந்­தார்.

இந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் பசப்பா பயன்­ப­டுத்­திய கைேபசி எண்­ணுக்கு ஒரு குறுந்­த­க­வல் வந்­தது. அதில் உங்­க­ளுக்கு 2வது முறை கொரோனா தடுப்­பூசி வெற்­றி­க­ர­மாகப் போடப்­பட்­டுள்­ளது. தொற்­றுப் பாதிப்­பில்­இருந்து தப்­பிக்க கவ­ன­மாக இருங்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது. இத­னைப் பார்த்த பசப்­பா­வின் குடும்­பத்­தி­னர் அதிர்ச்சி அடைந்­த­னர். இறந்­து­விட்ட பசப்­பா­வுக்கு எப்­படி இரண்டு முறை தடுப்­பூசி போட்­டி­ருக்க முடி­யும் என்று அவ­ரது குடும்­பத்­தி­னர் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

பேருந்து மோதி ஐவர் பலி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் வேகமாகச் சென்ற மின்சாரப் பேருந்து ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீதும் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.