முறைகேடு: சீன நிறுவனத்தின் ரூ.288 கோடி முடக்கப்பட்டது

2 mins read
942ad803-b5d2-4ac2-adfe-0e3b32df7de9
-

வெளிநாடுகளுக்கு ரூ.429 கோடி அனுப்பி அந்நியச் செலாவணி மோசடி

புது­டெல்லி: அந்­நியச் செலா­வணி மோசடி செய்த குற்­றச்­சாட்­டில் சிக்­கி­யுள்ள சீனாவைச் சேர்ந்த நிதி நிறு­வ­னத்­தின் 288 கோடி ரூபாயை மத்­திய அம­லாக்­கத்­துறை முடக்கி உள்­ளது.

'பி.சி. ஃபைனான்ஷி­யல் சர்விஸ்' என்ற பெய­ரில் இந்­தி­யா­வில் இயங்கி வரும் அந்த நிறு­வ­னம் சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நா­டு­களில் உள்ள சீன நிறு­வ­னங்­க­ளுக்கு பல­கோடி ரூபாய் அனுப்­பி­யது தெரி­ய­வந்­துள்­ளது.

வெளி­நாட்டு சீன நிறு­வனங்­களுக்கு மொத்­தம் ரூ.429 கோடி­யும் உள்­நாட்­டில் ரூ.941 கோடியும் செல­விட்­டுள்­ள­தா­க­வும் 'பி.சி. ஃபைனான்ஷி­யல் சர்விஸ்' நிறு­வ­னம் கணக்கு காட்டி உள்­ளது.

இதில் வெளி­நாட்டு சீன நிறு­வ­னங்­க­ளுக்கு கணினி மென்­பொ­ருள்­கள், அவை சார்ந்த சேவை­க­ளுக்­காக பணம் அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­நி­று­வ­னத்­தின் வட்­டார அலு­வ­ல­கத் தலை­வ­ரின் உத்­த­ரவை ஏற்று, நிறு­வன இயக்­கு­நர்­கள் எந்­த­வித விளக்­கமோ, விசா­ர­ணை­களோ இன்றி இவ்­வ­ளவு பெரிய தொகையை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்ப ஒப்­பு­தல் வழங்­கி­யது குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

இந்­நி­லை­யில், அந்­நியச் செலா­வணி தொடர்­பாக முறை­கேடு நடந்­தி­ருப்­ப­தற்­கான ஆதா­ரங்­கள் இருப்­ப­தால், அந்­நி­று­வ­னத்­தின் ரூ.288 கோடி ரூபாய் முடக்­கப்­பட்­டுள்­ள­தாக அம­லாக்­கத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

'பி.சி. ஃபைனான்ஷி­யல் சர்விஸ்' நிறு­வ­னத்­தின் இதர செயல்­பா­டு­கள் குறித்­தும் விசா­ரணை நடக்­கிறது.

இந்­நி­லை­யில், கடந்த ஆண்டு பல்­வேறு நிறு­வ­னங்­கள் கைபேசி செயலி மூலம் கடன் வழங்­கி­ய­தா­க­வும் வாங்­கிய தொகையை திருப்­பிச் செலுத்­த­வில்லை எனில் மிரட்­டல் விடுக்­கப்­பட்­ட­தா­க­வும் பர­வ­லா­கப் புகார்­கள் எழுந்­தன.

வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மாக 'பி.சி. ஃபைனான்ஷி­யல் சர்விஸ்' பதிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அந்­நி­று­வ­ன­மும் ஏரா­ள­மானோ ருக்கு கடன் வழங்­கி­ய­தா­கத் தெரி­கிறது. கடன் பெற்­ற­வர்­கள் கால­தா­ம­த­மாக தவணை தொகை செலுத்­தி­னாலோ, கடனை உரிய நேரத்­தில் திருப்­பிச் செலுத்த தவ­றி­னாலோ, அவர்­கள் மிரட்­டப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

"மேலும், அவர்­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­களை இந்­நி­று­வ­னம் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. குடும்­பத்­தா­ரும் மிரட்­ட­லுக்கு ஆளா­னதை அடுத்து, இந்­நி­று­வ­னத்­தில் கடன் வாங்­கிய சிலர் உயிரை மாய்த்­துக்கொள்­வது, பல்­வேறு தவ­றான முடி­வு­களை எடுத்­துள்­ள­தா­கத் தெரி­கிறது," என்று அம­லாக்­கத்­துறை வட்­டாரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஏரா­ள­மா­னோர் இது தொடர்­பாக புகார் அளிக்­கத் தொடங்­கியதை அடுத்து இந்த நிறு­வ­னம் தொடர்­பாக அமலாக்கத்துறை பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.