மோடி: விவசாயிகள் மனதில் எனக்கு உரிய இடத்தைப் பிடித்துவிட்டேன்

மோடி: விவசாயிகள் மனதில் எனக்கு உரிய இடத்தைப் பிடித்துவிட்டேன்

1 mins read
a558b0b3-6847-4d46-9ac2-cc8e53bdd3e8
-

புது­டெல்லி: நாட்­டில் உள்ள விவ­சா­யி­க­ளின் மன­தில் தமக்­கு­ரிய இடத்­தைப் பிடித்­து­விட்­ட­தா­கப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

அவர் அளித்த அண்­மைய பேட்டி ஒன்­றில், விவ­சா­யி­க­ளின் வேத­னையை தம்­மால் உணர முடிகிறது என்­றார்.

விவ­சா­யி­க­ளின் நலன் கருதியே மூன்று புதிய வேளாண் சட்­டங்­களும் கொண்டு வரப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், பின்­னர் நாட்டு நல­னைக் கருத்­தில் கொண்டு அவை திரும்­பப் பெறப்­பட்­டது என்­றார்.

"மக்­க­ளுக்­குச் சேவை­யாற்­று­வ­தில் பாஜக எப்­போ­தும் முனைப்­பாக உள்­ளது. 'அனை­வ­ரின் முயற்சி, அனை­வ­ருக்­கு­மான வளர்ச்சி' என்ற தாரக மந்­தி­ரம் மூலம் செயல்­பட்டு வரு­கி­றோம்," என்று பிர­த­மர் மோடி பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி கட்சி பிர­த­மர் மோடி மீது மாநி­லங்­க­ள­வை­யில் உரிமை மீறல் தீர்­மா­னம் கொண்டு வந்­துள்­ளது.

மாநி­லங்­க­ளவை­யில் பேசிய பிரதமர் மோடி, நாடா­ளு­மன்­றத்­தின் கதவு­களை மூடி­விட்டு, தெலுங்­கானா மாநி­லத்தை உரு­வாக்­கி­ய­தா­கக் குறிப்­பிட்டு இருந்­தார்.

இதை­ய­டுத்து, அவ­ரது கருத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து உரிமை மீறல் தீர்­மா­னத்­தைக் கொண்டு வந்­துள்­ளது டிஆர்­எஸ் கட்சி.

தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி கட்சி, பிர­த­மர் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், அண்­மை­யில் ராமா­நுஜர் சிலை திறப்பு விழா­வுக்­காக ஹைத­ரா­பாத் வந்த பிர­த­மர் மோடியை விமான நிலை­யத்­திற்கு நேரில் சென்று வர­வேற்­கா­மல் புறக்­க­ணித்­தார் அக்­கட்­சித் தலை­வ­ரும் தெலுங்­கானா முதல்­வ­ரு­மான சந்திர­சே­கர ராவ்.

இப்போது பிரதமர் மீது அக்கட்சி மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானமும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.