ஊரடங்கின்போது 3 மாதங்களில் 2.3 மி. பேர் வேலை இழந்தனர்

ஊரடங்கின்போது 3 மாதங்களில் 2.3 மி. பேர் வேலை இழந்தனர்

1 mins read
a967da72-6284-4aaf-9f13-0a637cda17b2
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 தொற்று மிகவும் வேக­மா­கக் குறைந்து வரு­கிறது.

இந்­தச் சூழ­லில் முகக்­க­வ­சத்தை அணி­ய­வேண்­டிய தேவை இனி இல்லை என்று அறி­விப்­பது பற்றி மகா­ராஷ்­டிரா மாநி­லம் பரி­சீ­லித்து வரு­வதாகத் தகவல்கள் கூறின.

இதன் தொடர்­பில் அந்த மாநி­லம் மத்­திய அர­சி­டம் இருந்­தும் மாநில சிறப்­புப் பணி வல்­லு­நர்­க­ளி­டம் இருந்­தும் யோச­னை­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் நாடி இருக்­கிறது.

அந்த மாநி­லத்­தின் சுகா­தார அமைச்­சர் ராஜேஷ் தோபி, கோல்­கா­புர் நக­ரில் இவ்வாறு கூறினார்.

இவ்­வே­ளை­யில், கொரோனா தலை­வி­ரித்­தா­டியபோது, 2020ஆம் ஆண்டு மார்ச்­சில் முதன்­மு­த­லாக ஊர­டங்கு நாடு முழு­வ­தும் விதிக்­கப்­பட்­டது.

ஊர­டங்கு நடப்­பில் இருந்த முதல் மூன்று மாதத்­தில் 2.3 மில்­லி­யன் மக்­கள் வேலை­யி­ழந்­து­விட்­ட­தாக மத்­திய அர­சாங்­கம் இப்­போது அறி­வித்து உள்­ளது.

உற்­பத்தி, கட்­டு­மா­னம், சுகா­தா­ரம், கல்வி, வர்த்­த­கம், போக்கு­வரத்து உள்­ளிட்ட முக்­கி­ய­மான ஒன்­பது துறை­க­ளைச் சேர்ந்த புள்ளி­வி­வ­ரங்­கள் மூலம் இந்த நில­வரம் தெரி­ய­வ­ரு­கிறது.

தொழி­லா­ளர், வேலை வாய்ப்பு அமைச்­சு இது பற்றி நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கி­யது.

இத­னி­டையே, நாட்­டில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக கிருமி தொற்­றியோரின் எண்­ணிக்கை 58,077 ஆக இருந்­ததாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

ஒரே நாளில் 1.5 லட்­சம் பேர் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். அதே­போல, மரண எண்­ணிக்­கை­யும் 657 பேரா­கக் குறைந்­து­விட்­டது. இந்த எண்­ணிக்கை முந்­திய 24 மணி நேரத்­தில் 1,241 ஆக இருந்­தது.