தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

18வது மாடி புளோக்கின் கூரை இடிந்து இருவர் மரணம்

1 mins read
95c8be4b-537c-48eb-82db-6dc36e7f4a51
இந்த 18 மாடி புளோக்கின் உச்சிப் பகுதி இடிந்து 18வது மாடியில் உள்ள வீடுகளுக்குள் விழுந்தது. படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­திய தலை­ந­கர் புது­டெல்லி அருகே ஹரி­யானா மாநில எல்­லைப் பகு­திக்­குள் கட்­டப்­பட்டு இருக்­கும் 'சின்டெல்ஸ் பார­டிசோ' என்ற 18 மாடி புளோக்­கின் உச்­சிப் பகுதி நேற்று அதி­கா­லை­யில் திடீரென இடிந்து விழுந்­த­தில் இரண்டு பேர் கொல்­லப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

இடி­பா­டு­களில் மேலும் பலர் சிக்கி இருக்­க­லாம் என்று அஞ்­சப்­ப­டு­வ­தா­க­வும் தேசிய பேரி­டர் மீட்­புக் குழு­வி­னர் மீட்­புப் பணி­யில் ஈடு­பட்டு இருப்­ப­தா­க­வும் ஊட­கங்­கள் மேலும் கூறின.

அந்­தப் புளோக்­கின் மேல் கூரை இடிந்து 18வது மாடி­யில் உள்ள வீடு­க­ளுக்­குள் திடீ­ரென விழுந்­விட்டது. அதில் பல­ரும் சிக்­கி­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்து நிகழ்ந்­த­தும் கீழ்­மாடி வீடு­களில் இருந்­த­வர்­கள் பயந்து போய் வெளி­யேறி­விட்­ட­னர்.

காயம் அடைந்த பல­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

இவ்­வே­ளை­யில், தர­மான பொருள்க­ளைக் கொண்டு அந்­தக் கட்­ட­டம் கட்­டப்­ப­ட­வில்லை என்­பதால் அதி­கா­ரி­கள் உரிய நட­வடிக்கை எடுக்க வேண்­டும் என்று கேட்டு குடி­யி­ருப்­பா­ளர்­கள் நேற்று வீதி­களில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.