திருவனந்தபுரம்: திருமணம் செய்துகொள்ள அனாதைப் பெண் தேவை என்று அப்துல் ஹாஜி, 26, என்பவர் இணையத்தில் விளம்பரம் செய்துஇருந்தார்.
அதைப் பார்த்த பைஜு நசீர், ராசிதா என்ற தம்பதி, தங்கள் சொந்த பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி அந்தப் பெண் அனாதை என்று சொல்லி பல முறை அப்துல் ஹாஜியிடம் இருந்து ரூ.11 லட்சத்தை வாங்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
மணப்பெண்ணைப் பல முறை கேட்டும் நேரே காட்டாததால் சந்தேகம் அடைந்த அப்துல் ஹாஜி காவல்துறையிடம் புகார் செய்தார்.
சொந்த பெண்ணையே அனாதை என்று சொல்லி அந்தத் தம்பதியர் மோசடியில் ஈடுபட்டது விசாரணை மூலம் தெரியவந்ததாக ஊடகத் தகவல்கள் நேற்று தெரிவித்தன.

