வயநாடு: கேரளாவில், 24 வயது இளைஞர் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வயநாடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சகீனா பல விவரங்களைத் தெரிவித்தார்.
"வயநாடு மாவட்டம் திருநெல்லி கிராமத்தில் பவல்லி பழங்குடியின குடியிருப்பில் வசிக்கும், 24 வயது இளைஞருக்குக் குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் மானந்தவாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"இந்த காய்ச்சல் கேரளாவில் பரவுவது இதுவே முதல்முறை. இது வைரஸ் கிருமி தாக்கத்தால் ஏற்படும் ரத்தக்கசிவு நோய். இது டெங்கு காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் கிருமி குடும்பத்தைச் சேர்ந்த நோய். இது குரங்குகளால் பரவுகிறது," என்றார் அவர்.

