50,000 பேராக சரிந்தது பாதிப்பு

50,000 பேராக சரிந்தது பாதிப்பு

2 mins read
1ac1c09d-2385-4912-8ecd-1612d4fc8a5e
-

புது­டெல்லி: இந்­திய மக்­க­ளைக் கலங்­க­டிக்­கும் வகை­யில் நாள்­தோறும் அதி­க­ரித்து வந்த கொவிட்-19 பாதிப்பு, இப்­போது தொடர்ந்து சரிந்து வரு­கிறது.

கடந்த 24 மணி நேரத்­தில் நாடெங்­கும் 50,407 பேருக்கு தொற்று உறு­தி­யா­கி­யுள்­ள­தா­க­வும் அன்­றாட கிரு­மிப் பர­வல் விகி­தம் 3.48% என்­ற­ள­வில் உள்­ள­தா­க­வும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக மத்­திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், நேற்று முன்­தி­னம் 58,077 பேர் தொற்­றால் பாதிக்­கப் பட்ட நிலை­யில், நேற்று 50,407 பேருக்கு இப்­பா­திப்பு உறு­தி­யா­னது. இது நேற்று முன்­தின பாதிப்பை விட­வும் 13% குறை­வா­கும்.

அதே­போல், தொற்றுப் பாதிப் பால் ஒரே நாளில் 804 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இதன்­மூ­லம் உயி­ரி­ழந்­தோரின் மொத்த எண்­ணிக்கை 507,981 ஆக உயர்ந்­துள்­ளது. கடந்த 24 மணி நேரத்­தில் கொரோனா பாதிப்­பில் இருந்து 136,962 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­ய நிலையில், குண­ம­டை­வோர் விகி­தம் 97.37% ஆக உள்­ளது. இத்தொற்­றுக்கு தற்­போது 610,443 பேர் சிகிச்சை பெற்று வரு­ கின்­ற­னர் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிருமி பாதிப்பு குறைந்து வருவதால் முகக் கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரி சீலித்து வருவதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

கொரோனா முடி­வுக்கு வர­வில்லை என எச்­ச­ரிக்கை

இதற்­கி­டையே, "கொரோனா பர­வல் முடி­வுக்கு வந்­து­விட்­ட­தாக நினைத்துவிடா­தீர்­கள். தற்­போது பின்­பற்­றும் தடுப்பு நட­வ­டிக்­கை­கள், பாது­காப்பு நெறி­மு­றை­கள் எதிர்­காலத்­தி­லும் தொட­ர­வேண்­டும். உரு­மா­றிய தொற்று எந்த நேரத்­தி­லும் எங்கு வேண்­டு­மா­னா­லும் பர­வ­லாம். எனவே, எச்­ச­ரிக்­கை­யுடன் இருப்­பது அவ­சி­யம். இவ்வாண்டு இறு­தி­யில் நிலைமை சற்று சீர­டை­ய­லாம்,'' என உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலைமை விஞ்­ஞானி சௌமியா சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்­ளார்.

கோடிக்­க­ணக்­கில் தடுப்­பூசி போடாத முதி­ய­வா்­கள்

மக்­க­ள­வை­யில் மத்­திய சுகா­தா­ரத் துறை இணை அமைச்சா் பாரதி பிர­வீண் பவாா் கூறி­ய­போது, இம்­மா­தம் 8ஆம் தேதி நில­வ­ரப்­படி, 60 வய­துக்கு மேற்­பட்ட முதி­ய­வர்­கள் 1,20,82,792 போ் முதல் தவணை தடுப்­பூ­சி­­யும் 1,68,03,864 போ் இரண்­டாம் தவணை தடுப்­பூசி ­யும் இது­வரை போட்­டுக்கொள்­ள­வில்லை என குறிப்பிட்டுள்ளார்.