புதுடெல்லி: இந்தியாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணி வதைத் தவிர்க்கலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
முகக்கவசத்தில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்திய அரசு இவ்வாறு கோரி உள்ளது.
இதனிடையே, இந்தியாவில் புதிதாக கொவிட்-19 கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்து வருவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்றாட தொற்று 44,877 என்றளவில் இருந்ததாகவும் சிகிச்சையில் உள்ளோர் எண் ணிக்கையும் மரண அளவும் குறைவதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.
எல்லா மாநிலங்களிலும் தொற்று குறைவதால் படிப்படியாக தளர்வுகள் அமலாகி வருகின்றன.

