ரூ.2,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்; 'கஞ்சா மலை' அழிப்பு

ரூ.2,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்; 'கஞ்சா மலை' அழிப்பு

2 mins read
48719ffa-44dc-4faa-a848-f8122af0d73a
-

போர்­பந்­தர்: குஜ­ராத் போர்­பந்­தர் அருகே வெளி­நாட்டுக் கப்­ப­லில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்­புள்ள 760 கிலோ போதைப்பொருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கடற்­ப­டை­யி­ன­ரும் போதைப்­பொ­ருள் ஒழிப்­புப்­ பி­ரி­வி­ன­ரும் நடுக்கட­லில் அந்­தக் கப்­பலை சோதனை நடத்­தி­ய­போது அதிக அள­வில் போதைப்­பொ­ருள் கப்­பலில் இருந்தது தெரியவந்­த­தாக தக­வல்­கள் கூறின.

ஹெரா­யின், கஞ்சா, போதை மாத்தி­ரை­கள் உள்­ளிட்ட அந்­தப் போதைப்பொருள்­கள் குஜ­ராத் போர்ப்­பந்­தர் துறைமுகத்­திற்­குக் கொண்டு வரப்­பட்­டன.

குஜ­ராத் மாநி­லத்­தின் கடலோரப் பகு­தி­யில் அரபி­க் கட­லில் கடத்தல் கப்­பல் சிக்­கி­ய­தாக போதைப்­பொருள் ஒழிப்­புப்­பி­ரி­வி­னர் தெரி­வித்­த­னர்.

ஆழ்கடல் பகு­தி­யில் எடுக்­கப்­பட்­டுள்ள இத்­த­கைய முதல் நடவடிக்கை இது என்று தெரிவ தாக­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இத­னி­டையே, ஆந்­தி­ரா­வில் போதைப்பொருள் புழக்­கத்தைக் கட்டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்ட 'பரி­வர்த்­தனா நட­வ­டிக்கை' என்ற முயற்­சி­யின் விளை­வாக மாநி­லம் முழு­வ­தி­லும் ரூ.850 கோடி மதிப்­புள்ள 2 லட்சம் கிலோ கஞ்சா பிடி­பட்­டது.

அவை வனப் பகு­தி­யில் மலை மலையாக 12 இடங்­களில் குவிக்கப் பட்டு எரிக்கப்பட்டது.

ஆந்­திரா-ஒடிசா மாநில எல்லை­யில் குக்­கி­ரா­மங்­களில் கஞ்சா பயி­ரி­டப்­பட்டு நாடு முழு­வ­தும் பல்­வேறு வழி­களில் கடத்­தப்­ப­டு­கிறது என்­றும் கஞ்சா வளர்க்க கிராம மக்­க­ளுக்கு நக்­ச­லைட்­டு­கள் உதவி செய்து வரு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

இவ்­வே­ளை­யில், மும்பை விமான நிலையத்தில் ஜிம்­பாப்வே பெண்­ணி­டம் இருந்து சுமார் ரூ.60 கோடி போதைப்­பொருளைப் பறி­முதல் செய்­த­ அதிகாரிகள் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.

ஆந்திராவில் அதிகாரிகள் கைப்பற்றிய ரூ.850 கோடி மதிப்புள்ள 2 லட்சம் கிலோ கஞ்சா மலைமலையாக குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம்