பொதுப்பங்கு வெளியீட்டுக்குத் தயாராகும் இந்திய அரசின் காப்புறுதி நிறுவனம்

2 mins read
efab598c-ba15-418d-9dbe-09ba2f76f96f
மும்பையில் உள்ள லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இந்­திய அர­சாங்­கத்­தின் காப்­பு­றுதி நிறு­வ­ன­மான எல்­ஐசி பொதுப்­பங்கு வெளி­யீடு (ஐபிஓ) செய்ய உள்­ளது. அதற்­கான ஆயத்­தப்­ப­ணி­கள் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், நேற்று பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான செபி­யி­டம் பங்­கு­கள் விற்­பனை தொடர்­பான வரைவு அறிக்­கையை (டிஆர்­ஹெச்பி) எல்­ஐசி தாக்­கல் செய்­துள்­ளது. பொதுப் பங்கு வெளி­யீட்டுத் தேதி இன்­னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

எனி­னும் மார்ச் 31ஆம் தேதிக்­குள் பொதுப்­பங்கு வெளி­யீட்டு முறை செயல்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

எல்­ஐ­சி­யில் ஐந்து விழுக்­காட்­டுப் பங்­கு­களை விற்று ரூ.78,000 கோடி நிதி திரட்ட மத்­திய அரசு திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது. மொத்­தம் 31.6 கோடி பங்­கு­கள் விற்­கப்­படும் எனத் தெரி­கிறது.

இதில் ஐம்­பது விழுக்­காடு நிறுவன முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும், 35% சில்­லறை முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் 10% எல்­ஐசி ஈட்­டு­று­தி­யா­ளர்­க­ளுக்­கும் (பாலி­சி­தா­ரர்­கள்) ஒதுக்­கப்­பட இருப்­ப­தா­க­வும், ஐந்து விழுக்­காடு பங்கு விலக்கு அளிக்­கப்­பட இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இதன் மூலம் ரூ.1.75 லட்­சம் கோடியைத் திரட்ட மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யம் செய்­துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்­போது தனி­யார் காப்­பீட்­டுத் துறை­யில் அந்­நிய முத­லீடு 74 விழுக்­காடு வரை உள்­ளது.

பொதுத்­துறை வங்­கி­களில் 20% வரை அந்­நிய முத­லீடு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், எல்.ஐ.சி. காப்­பு­றுதி நிறு­வ­னத்­தில் இது­வரை அந்­நிய முத­லீட்­டுக்கு அனு­ம­தி­யில்லை. தற்­போது பொதுப்­பங்கு வெளி­யீட்டு முறை செயல்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருப்­ப­தால் எல்.ஐ.சி.-யில் அந்­நிய முத­லீ­டு­கள் குறித்து பரி­சீ­லிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. நாட்­டின் மொத்த காப்­பீட்­டுச் சந்­தை­யில் 70 விழுக்­காடு வரை எல்.ஐ.சி. காப்­பு­றுதி நிறு­வ­னத்­தி­டம் உள்­ளது.

இந்­நி­று­வ­னத்­தில் 13 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட காப்­பு­றுதி முக­வர்­கள் உள்­ள­னர். இந்­நி­று­வ­னத்­தின் அலு­வ­ல­கத்­தில் மட்­டும் 114,000 பேர் பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.