28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் மோசடி; சிக்கலில் குஜராத் நிறுவனம்

28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் மோசடி; சிக்கலில் குஜராத் நிறுவனம்

1 mins read
32cc1bdc-5852-45aa-b8cc-47f88efff916
-

காந்­தி­ந­கர்: நீரவ் மோடி, விஜய் மல்­லையா ஆகி­யோரை மிஞ்­சும் வகை­யில் குஜ­ராத்­தைச் சேர்ந்த கப்­பல் கட்­டும் நிறு­வ­னம் ஒன்று ஏறக்­கு­றைய 23,000 கோடி ரூபாய் வங்­கி­க­ளி­டம் இருந்து கடன்­பெற்று மோசடி செய்­துள்­ளதை சிபிஐ அம்­ப­ல­மாக்­கி­யுள்­ளது.

ஐசி­ஐ­சிஐ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்­தியா, ஐடி­பிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்­சாப் நேஷ­னல் வங்கி, இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்கி உள்­ளிட்ட 28 வங்­கி­களில் 22,842 கோடி ரூபாய் கட­னாகப் பெற்று திருப்பிச் செலுத்­தா­மல் மோச­டி­யில் ஈடு­பட்டு இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும், சிபிஐ குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

அந்த நிறு­வ­னத்­தின் இயக்­குநர்­கள் ரிஷி அகர்­வால், சந்­தா­னம் முத்­து­சாமி, அஷ்­வினி குமார் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது. 'ஏபிஜி ஷிப்­யார்டு' என்­னும் கப்­பல் கட்­டு­மான நிறு­வ­னம் குஜ­ராத்தை தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு இயங்கி வரு­கிறது. தஜெஹ் மற்­றும், சூரத்­தில் கட்­டு­மா­னத் தளங்­க­ளைக் கொண்­டுள்ள இந்த நிறு­வ­னம் கடந்த 16 ஆண்­டு­களில் 165 கப்­பல்­களைக் கட்­டி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்த நிறு­வ­னத்­தின் மீது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்­தியா 2019ஆம் ஆண்டு வங்கிக் கடன் தொடர்­பாக புகார் ஒன்றை அளித்­தது.

இந்த வழக்கை சிபிஐ விசா­ரித்து வரும் நிலை­யில் வங்­கி­களில் இருந்து பெறப்­பட்ட பல்­லா­யி­ரம் கோடி ரூபாய் கடன்­களை வெளி­நா­டு­களில் உள்ள இதன் துணை நிறு­வ­னங்­க­ளுக்கு முறை­கே­டாக மாற்­றி­யது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்ளது.