சிவசேனா: பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்க சதி வேலை

சிவசேனா: பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்க சதி வேலை

2 mins read
a802eaf1-e498-4222-88be-77895fdff2b9
-

மும்பை: மகாராஷ்­டிர அர­சைக் கவிழ்ப்­ப­தற்­காக மத்­திய விசா­ரணை அமைப்­பு­களை பாஜக தவ­றாக பயன்­ப­டுத்­து­வ­தாக சிவ­சேனா எம்.பி. சஞ்­சய் ராவத் குற்­றம்­சாட்டி உள்­ளார். மும்­பை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

சிவ­சேனா, தேசி­ய­வாத காங்­கி­ரஸ் மற்­றும் காங்­கி­ரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்­ட­ணித் தலை­வர்­க­ளைக் குறி­வைத்து மத்­திய விசா­ரணை அமைப்­பு­கள் விசா­ரணை மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும், இந்த அழுத்­தங்­க­ளுக்­கெல்­லாம் அடி­ப­ணிய மாட்­டோம் என்­றும் சஞ்­சய் ராவத் கூறி­னார்.

"பாஜ­க­வைச் சேர்ந்த சில தலை­வர்­கள் என்­னைத் தொடர்­பு­கொண்டு, மகா­வி­காஸ் கூட்­டணி ஆட்­சி­யைக் கவிழ்ப்­ப­தற்கு உத­வு­மாறு கேட்­டுக்­கொண்­ட­னர். அவ்­வாறு செய்­யா­விட்­டால் கடு­மை­யான விளை­வு­க­ளைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று எச்­ச­ரிக்கை விடுத்­த­னர். இதற்­குப் பிறகு, அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள், எனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளைக் குறி­வைக்­கத் தொடங்­கி­னர்.

உத்­தவ் தாக்­கரே தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தைக் கவிழ்க்க மத்­திய விசா­ரணை அமைப்­பு­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஆனால் இதற்­கெல்­லாம் நாங்­கள் அஞ்­ச­மாட்­டோம். இதை மறைந்த தலை­வர் பால் தாக்­கரே எங்­க­ளுக்­குக் கற்­றுக்­கொ­டுத்­துள்­ளார். மகா­ராஷ்­டிரா, மேற்கு வங்­கா­ளம் மற்­றும் ஜார்க்­கண்ட் மாநி­லங்­க­ளி­லும் ஆட்­சி­யைக் கவிழ்க்க சதி நடக்­கிறது.

"பாஜக முன்­னாள் எம்.பி. கிரித் சோமை­யா­வின் மகன் நீல் சோமையா, பிஎம்சி வங்கி மோச­டி­யில் குற்­றம் சாட்­டப்­பட்ட ராகேஷ் வாத்­வா­னின் வர்த்­த­கப் பங்­கா­ளி­யாக இருக்­கி­றார்.

"பிஎம்சி வங்கி மோசடி வழக்­கில் கிரித் சோமையா மற்­றும் அவ­ரது மகன் கைது செய்­யப்­பட வேண்­டும்.

"இது தொடர்­பான அனைத்து ஆவ­ணங்­க­ளை­யும் முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­வி­டம் சமர்ப்­பித்து, உரிய நட­வ­டிக்கை எடுக்­கும்­படி தெரி­வித்துள்ளேன். இன்னும் இரண்டு, மூன்று நாள்களுக்குள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக முதல்வர் கூறியுள்ளார்," என்­றும் சஞ்­சய் ராவத் தெரி­வித்துள்ளார்.