கொரோனா சிகிச்சைக்கு வந்த சிறுமி: சீரழித்த 61 பேர் கைது

கொரோனா சிகிச்சைக்கு வந்த சிறுமி: சீரழித்த 61 பேர் கைது

1 mins read
90b0ed38-5633-4261-a947-ca431cb11698
-

அம­ராவதி: கொரோனா சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்ட சிறு­மியை பாலி­யல் தொழி­லில் ஈடு­ப­டுத்­திய மருத்­து­வ­மனை ஊழி­யர் உட்­பட 61 பேரை ஆந்­திர காவல்­துறை கைது செய்­துள்­ளது.

ஆந்­தி­ரா­வின் குண்­டூர் பகு­தி­யைச் சேர்ந்த அந்­தச் சிறு­மி­யும் அவ­ரது தாயும் அங்­குள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் கொரோனா தொற்­றுப் பாதிப்­பு­டன் அனு­ம­திக்கப்­பட்­ட­னர். சிறு­மி­யின் தாய் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­தார்.

இந்­நி­லை­யில், அம்­ம­ருத்­து­வ­மனை­யில் பணி­பு­ரி­யும் சுவர்­ண­குமாரி என்­ப­வர், நாட்டு மருந்து மூலம் கொரோனா தொற்­றைக் குணப்­ப­டுத்­தி­வி­ட­லாம் என்று சிறுமி­யின் தந்­தை­யி­டம் கூறி உள்ளார்.

அதை நம்­பிய அவர் தன் மகளை சுவர்­ண­கு­மா­ரி­யி­டம் ஒப்­படைக்க, இந்த வாய்ப்பைப் பயன்­படுத்தி சிறு­மியை குண்­டூ­ரில் இருந்து கடத்­தி­னார் சுவர்ணகுமாரி.

பின்­னர் விஜ­ய­வாடா, நெல்­லூர், ஹைத­ரா­பாத் எனப் பல்­வேறு நக­ரங்­க­ளுக்கு சிறு­மி­யைக் கொண்டு சென்று, பாலி­யல் தொழி­லில் வலுக் கட்டா­ய­மாக ஈடு­ப­டுத்தி உள்­ளார்.

இத­னால் சிறு­மி­யின் உடல்­நிலை மிக­வும் மோச­ம­டைய, அப்போ­தும் சுவர்­ண­கு­மாரி விட வில்லை. ஏறத்­தாழ ஆறு மாத காலம் பல்­வேறு கொடு­மை­க­ளுக்கு ஆளான அந்­தச் சிறுமி, சில தினங்­க­ளுக்கு முன்பு எப்­ப­டியோ சுவர்­ண­கு­மா­ரி­யின் கும்­ப­லி­டம் இருந்து தப்­பித்து தன் தந்­தையைச் சென்­ற­டைந்­தார்.

மக­ளின் நிலை­யைக் கண்டு பத­றிப்­போன அவர், காவல்­து­றை­யில் புகார் அளிக்க, அதன் பின்னர் நடந்த தீவிர விசா­ர­ணை­யின் போது சிறு­மியை பாலி­யல் தொழிலில் ஈடு­ப­டுத்­திய, சிறு­மியை சீர­ழித்த 61 பேர் அடுத்­த­டுத்து கைதாகி உள்­ள­னர்.