கிணற்றின் மேல்தளம் இடிந்து விழுந்தது: 13 பெண்கள் பலி

கிணற்றின் மேல்தளம் இடிந்து விழுந்தது: 13 பெண்கள் பலி

1 mins read
9712a43f-31e0-4e7e-96d0-370cc2995c28
13 பேரை பலி வாங்கிய கிணறு. படம்: தகவல் ஊடகம் -

லக்னோ: வீட்­டுக் கிணற்­றின் மீது அமைக்­கப்­பட்­டி­ருந்த கான்­கி­ரீட் தளம் திடீ­ரென உடைந்­த­தால் அதன் மீது அமர்ந்­தி­ருந்த 13 பெண்­கள் கிணற்­றில் விழுந்து பலி­யா­கி­னர்.

இந்­தச் சோகச் சம்­ப­வம் உத்­த­ரப் ­பி­ர­தே­சத்­தின் குஷி­ந­கர் மாவட்­டத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற திரு­ம­ணத்­தின்­போது நிகழ்ந்­துள்­ளது.

மண­ம­கள் வீட்­டில் நடை­பெற்ற அந்­தத் திரு­ம­ணத்­தில் பங்­கேற்க ஏரா­ள­மான விருந்­தி­னர்­கள் வந்­தி­ருந்­த­னர். பெண்­கள் பலர் வீட்­டின் பின்­பு­றத்­தில் உள்ள கிணற்­றின் மீது அமைக்­கப்­பட்­டி­ருந்த கான்­கிரீட் தளம் வலு­வாக இருப்­ப­தா­கக் கருதி அதன் மீது அமர்ந்து பேசிக் கொண்­டி­ருந்­த­னர்.

முத­லில் நான்­கைந்து பெண்­கள் மட்­டுமே இருந்த நிலை­யில், நேர­மாக ஆக அந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. அவர்­களில் சில சிறு­மி­களும் அடங்­கு­வர்.

இந்­நி­லை­யில் பாரம் தாங்­கா­மல் அந்­தக் கான்­கி­ரீட் தளம் திடீ­ரென இடிந்து விழுந்­தது. இத­னால் அதன் மீது அமர்ந்­தி­ருந்த பெண்­கள் அனை­வ­ருமே ஆழ­மான கிணற்­றுக்­குள் விழுந்­த­னர்.

ஆழ­மான கிணறு என்­ப­தால் அங்­கி­ருந்­த­வர்­க­ளால் கிணற்­றில் விழுந்­த­வர்­களை மீட்க முடி­ய­வில்லை. இதை­ய­டுத்து காவல்­துறைக்­கும் தீய­ணைப்பு நிலை­யத்­துக்­கும் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

விரைந்து வந்த தீய­ணைப்பு மீட்புப் படை­யி­னர் கிணற்­றில் விழுந்­த­வர்­களை மீட்­கும் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

இதில் பதி­னைந்­துக்­கும் மேற்­பட்ட பெண்­களும் சிறு­மி­களும் படு­கா­யங்­க­ளு­டன் மீட்­கப்­பட்­ட­னர். எனி­னும், 13 பெண்­கள் நீரில் மூழ்கி இறந்­து­விட்­ட­னர். இத­னால் திருமண வீடு சோகம் நிறைந்து காணப்­பட்­டது.