ஸ்ரீநகர்: காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள, தாதாகி மலைக் கிராமத்தில் வசிக்கும் சரிபாதிக் குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது காது கேளாத, வாய் பேச முடியாத நிலையில் பிறக்கின்றன.
அக்கிராமத்தில் இப்போது 105 குடும்பங்கள் உள்ளன. இதில் 55 குடும்பங்களில் 78 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.
இவர்களில் 41 பேர் பெண்கள், 30 பேர் குழந்தைகள். இதற்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில், இந்தக் கிராமத்தை ராணுவத்தினர் தத்தெடுத்து மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
மேலும், பத்து குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகளையும் வழங்கி உள்ளனர்.

