சண்டிகர்: மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலை அடுத்து ஹரியானாவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
எனினும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றுவது அவசியம் என அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

