ஜூலை முதல் நாடு முழுவதும் 'பிளாஸ்டிக்' பொருள்களுக்குத் தடை

ஜூலை முதல் நாடு முழுவதும் 'பிளாஸ்டிக்' பொருள்களுக்குத் தடை

1 mins read
4521b218-80a4-4c6c-bc61-3e0b69dd5b6b
-

புது­டெல்லி: எதிர்­வ­ரும் ஜூலை மாதம் முதல் நாடு முழு­வ­தும் 'நெகிழி' (பிளாஸ்­டிக்) பொருள்­களைப் பயன்­ப­டுத்த மத்­திய அரசு தடை விதித்­துள்­ளது.

தடையை மீறி­னால் கடும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என­வும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டுள்­ளது.

இது தொடர்­பாக மத்­திய சுற்றுச்­சூ­ழல் அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில், கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மத்­திய அர­சால் அடை­யா­ளம் காணப்­பட்ட, ஒரு­முறை பயன்­ப­டுத்­தும் வகை­யி­லான நெகிழிப் பொருள்­க­ளின் உற்­பத்­திக்கு ஜூலை முதல் தேதி­யில் இருந்து தடை விதிக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், நெகிழிப் பொருள்­க­ளின் இறக்­கு­மதி, சேமிப்பு, விநி­யோ­கம், விற்­பனை, பயன்­படுத்­து­தல் ஆகி­ய­வற்­றுக்குத் தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக அந்த அமைச்சு கூறி­யுள்­ளது.

நெகிழி மூலம் தயா­ரிக்­கப்­படும் சிறிய ரக காது குடை­யும் குச்சிகள், கொடி­கள், ஐஸ் கிரீம் குவளை­கள், ஸ்ட்ரா, ஸ்பூன், சிக­ரெட் அட்­டை­கள், நூறு மைக்­ரா­னுக்­கும் குறை­வாக உள்ள பொருள்­கள் ஆகி­ய­வை­யும் தடை செய்­யப்­பட்ட பொருள்­க­ளின் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ள­தாக சுற்­றுச்­சூ­ழல் அமைச்சு தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

எதிர்­வ­ரும் ஜூன் மாத இறு­திக்­குள் வணி­கர்­கள் மேற்­கு­றிப்­பிட்ட பொருள்­க­ளின் விற்­ப­னையை முடி­வுக்கு கொண்டு வர வேண்­டும் என்­றும் அதன் பின்­னர் இவற்றை வைத்­தி­ருந்­தாலோ, விநி­யோ­கம் செய்­தாலோ கடும் நட­வ­டிக்கை பாயும் என்­றும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தடை செய்­யப்­பட்ட நெகிழிப் பொருள்­கள் வைக்­கப்­பட்­டுள்ள இடங்­க­ளுக்கு சீல் வைக்­கப்­படும் என்­றும் உரிய அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் சுற்­றுச்­சூ­ழல் அமைச்சு அறிக்கை ஒன்றில் மேலும் தெரி­வித்­துள்­ளது.