முல்லைப் பெரியாறு: புதிய மனு தாக்கல் செய்த கேரளா

முல்லைப் பெரியாறு: புதிய மனு தாக்கல் செய்த கேரளா

2 mins read
4fb0e423-c305-4ecc-ab49-1798591b36a4
-

புது­டெல்லி: முல்­லைப்­பெ­ரி­யாறு அணை­யின் பாது­காப்பு தொடர்­பாக தொடுக்­கப்­பட்ட வழக்­கில் உச்ச நீதி­மன்­றம் கடந்த 2014ஆம் ஆண்டு வழங்­கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்­டும் என கேரள அரசு வலி­யு­றுத்தி உள்­ளது.

இது தொடர்­பாக அம்­மாநில அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் புதிய மனு ஒன்றைத் தாக்­கல் செய்துள்ளது.

முல்­லைப்­பெ­ரி­யாறு அணை­யின் நீர்­மட்­டம் 136 அடிக்கு மேல் அதி­க­ரிக்­கப்­ப­டக் கூடாது என கேரள அரசு வலி­யு­றுத்தி வரு­கிறது. ஆனால் அணை­யின் பாது­காப்பு குறித்து கேரளா வீண் அச்­சத்­தைக் கிளப்­பு­வ­தா­க­வும் அணை­யின் நீர்­மட்­டம் 142 அடி­யாக இருக்க வேண்­டும் என்­றும் தமி­ழக அரசு கூறு­கிறது.

இதை­ய­டுத்து இரு­த­ரப்­பும் உச்ச நீதி­மன்­றத்தை அணு­கி­யுள்­ளன.

இதற்­கி­டையே, முல்லைப் பெரி­யாற்­றில் கேரளா அரசு சார்­பில் புதிய அணை கட்­டப்­ப­டு­வது உறுதி என அம்­மா­நில ஆளு­நர் ஆரிப் முக­மது கான் தெரி­வித்­துள்­ளார்.

கேரள சட்­டப்­பே­ர­வை­யில் உரை­யாற்­றிய அவர், முல்லைப் பெரி­யாறு அணை­யின் நீர்­மட்­டத்தை 136 அடிக்கு மேல் நீர்மட்­டம் உயர்த்­தக் கூடாது என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

இந்­நி­லை­யில், ஐந்து நதி­கள் இணைப்புத் திட்­டம் தொடர்­பாக ஆறு மாநி­லங்­க­ளு­டன் மத்­திய அரசு நேற்று ஆலோ­சனை நடத்­தி­யது.

கோதா­வரி, காவிரி இணைப்பு உட்­பட ஐந்து நதி­கள் இணைப்புத் திட்­டம் விரை­வில் செயல்­ப­டுத்­தப்­படும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. இதற்­கான நட­வ­டிக்­கை­களை மத்­திய நீர்­வள அமைச்சு மேற்­கொண்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், தமி­ழ­கம், கர்­நாடகா, கேரளா, புதுவை, தெலுங்­கானா, ஆந்­திரா உள்­ளிட்ட ஆறு மாநி­லங்­க­ளின் நீர்­வ­ளத் துறை­யின் செய­லா­ளர்­கள் பங்­கேற்ற ஆலோ­சனைக் கூட்­டம் நேற்று மத்­திய நீர்­வளத்­துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகா­வத் தலைமை­யில் நடை­பெற்­றது. அப்­போது ஐந்து நதி­கள் இணைப்புத் திட்­டத்தை எவ்­வாறு செயல்­ப­டுத்­துவது, அதன் சாதக பாத­கங்­கள் என்ன என்­பது குறித்து மாநி­லங்­க­ளி­டம் கருத்து கேட்­கப்­பட்­ட­தா­கத் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன.