'தமிழ்த் தாத்தா' பிறந்தநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து

'தமிழ்த் தாத்தா' பிறந்தநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து

1 mins read
7abc1587-55c4-4873-a908-a77e3939f8bf
-

சென்னை: 'தமிழ்த் தாத்தா' என்­ற­ழைக்­கப்­படும் உ.வே.சாமி­நாத ஐய­ரின் பிறந்­த­நாள் நேற்று தமி­ழ­கத்­தில் கொண்­டா­டப்­பட்­டது.

இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடி­ அவ­ரது பிறந்­த­நாளை நினைவு­கூர்ந்து, அவ­ரது அரும்­ப­ணி­க­ளை நினைவுகூர்ந்துள்ளார்.

"தமிழ்த் தாத்தா உ.வே.சாமி­நாத ஐய­ரின் பிறந்­த­நாளை முன்­னிட்டு அவரை நினைவுகூர்­கி­றேன். தமிழ் கலாசாரம் மற்­றும் மொழிக்­காக அவர் ஆற்­றிய அரும்­ப­ணிக்­காக போற்­றப்­ப­டு­ப­வர். சங்க கால இலக்­கி­யங்­களை மக்­க­ளி­டம் கொண்டு சேர்த்­த­து­டன் உன்­ன­த­மான பாரம்­பரி­யத்தை கட்­டிக்­காக்க பங்­க­ளிப்பு செய்­த­வர்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

அத்­து­டன், இளம் தலை­மு­றை­யி­னர் அவ­ரது ஒப்­பற்ற படைப்­பு­களை வாசிக்க வேண்­டும் என்­றும் திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.