காஷ்மீருக்குள் நுழைய தயாராக 130 பயங்கரவாதிகள் அமெரிக்க ஆயுதங்களுடன் ஊடுருவும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள்

காஷ்மீருக்குள் நுழைய தயாராக 130 பயங்கரவாதிகள் அமெரிக்க ஆயுதங்களுடன் ஊடுருவும் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள்

2 mins read
8035b866-3fc5-46c5-925c-fa19165868e7
-

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தானைச் சேர்ந்த பயங்­க­ர­வா­தி­கள் காஷ்மீருக்­குள் ஊடு­ருவி வரு­வ­தாக பாது­காப்புப் படை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில், காஷ்­மீர் எல்லை­யில் கொல்­லப்­பட்ட ஒரு பயங்­க­ர­வா­தி­யி­டம் இருந்து அமெ­ரிக்க ஆயு­தங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தன் மூலம் இது உறுதி செய்­யப்­பட்­டுள்ள­தா­க ராணுவ மேஜர் ஜென­ரல் அஜய் சந்த்­புரா கூறி­யுள்­ளார்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து அமெ­ரிக்­கப் படை­கள் நாடு திரும்­பி­ய­போது, அவர்­கள் ஏரா­ள­மான ஆயு­தங்­களை விட்­டுச் சென்­ற­தா­க­வும் அவை இப்­போது பயங்­க­ர­வா­தி­க­ளி­டம் இருப்­ப­தா­க­வும் அஜய் சந்த்­புரா கூறி­னார்.

"அண்மையில் நமது பாது­காப்­புப் படை­யி­ன­ரால் காஷ்மீரில் சுட்­டுக் கொல்­லப்­பட்ட பயங்­க­ர­வா­தி­யிடம் நவீன ஆயு­தங்­களும் தக­வல் தொடர்­புக் கரு­வி­களும் கைப்­பற்­றப்­பட்­டன. இர­வி­லும் பயன்­ப­டுத்­தக்கூடிய திறன்­மிக்க தள­வா­டங்­கள், ஆயு­தங்­களை பாகிஸ்­தான் வழி­யாக காஷ்­மீ­ருக்­குள் கொண்டு வரு­வதே பயங்­க­ர­வா­தி­க­ளின் திட்­டம். அமெ­ரிக்கப் படை­கள் ஆப்­கானை விட்டு வெளி­யே­றி­ய­தும் காஷ்­மீரி­லும் நிலைமை மாறி­யுள்­ளது," என்­றார் அஜய் சந்த்­புரா.

காஷ்­மீ­ரில் ஏற்­கெ­னவே இரு­நூறு பயங்­க­ர­வா­தி­கள் ஊடு­ரு­வி­யி­ருக்­கக்கூடும் என்று குறிப்­பிட்ட அஜய் சந்த்­புரா, அவர்­களில் 45 பேர் பாகிஸ்­தானைச் சேர்ந்­த­வர்­கள் எனத் தக­வல் கிடைத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"காஷ்­மீ­ருக்­குள் ஊடு­ருவ மேலும் 130 பயங்­க­ர­வா­தி­கள் பாகிஸ்­தா­னில் தயார் நிலை­யில் உள்­ள­னர். எல்­லை­யில் இந்­திய ராணு­வத்­தின் கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ள­தால் அவர்­க­ளால் காஷ்­மீ­ருக்­குள் எளி­தில் ஊடு­ருவ முடி­ய­வில்லை. இந்தக் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு தொடர்ந்து நீடிக்கும்," என்­றார் அஜய் சந்த்­புரா.

இதற்­கி­டையே தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் காஷ்­மீ­ரி­லும் ராஜஸ்­தா­னி­லும் நேற்று முன்­தி­னம் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

காஷ்­மீ­ரில் சோபோர், குப்­வாரா உள்­ளிட்ட மாவட்­டங்­களில் உள்ள எட்டு இடங்­க­ளி­லும் ராஜஸ்­தா­னின் ஜோத்­பூர் மாவட்­டத்­தி­லும் இந்­தச் சோதனை நடை­பெற்­ற­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சோத­னை­யின்­போது பல்­வேறு முக்­கிய ஆவணங்­கள், மின்­னி­லக்க கரு­வி­கள் ஆகி­யவை கைப்­பற்­றப்­பட்­டன.

காஷ்­மீ­ரி­லும் டெல்­லி­யி­லும் தாக்­கு­தல் நடத்த சதி செய்­த­தாக சில பயங்­க­ர­வாத அமைப்­பு­கள் மீது சில வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன. இதை­ய­டுத்து 28 பேரை தேசிய புல­னாய்வு முகமை கைது செய்­துள்­ளது.