மோடி: வேளாண் துறையில் ஆளில்லா வானூர்திகள் புதிய புரட்சியின் தொடக்கம்

மோடி: வேளாண் துறையில் ஆளில்லா வானூர்திகள் புதிய புரட்சியின் தொடக்கம்

2 mins read
feabd283-1ff1-489f-a1e7-a67d36e8aa4f
-

பெங்­க­ளூரு: வேளாண் துறை­யில் ஆளில்லா சிறிய ரக வானூர்திகளைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் புதிய புரட்சி தொடங்கி உள்­ள­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

பூச்­சிக் கொல்­லி­கள், உரங்­கள் தெளித்­தல் உள்­ளிட்ட பணி­களில் இனி ஆளில்லா வானூர்­தி­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் வேளாண் நிலம் சார்ந்த பதி­வு­கள் மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கப்­படும் என்­றும் மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

இதற்­காக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­படும் என்று அண்­மை­யில் நிதி­நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­த­போது மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­தி­ருந்­தார். இந்­நி­லை­யில், ஆளில்லா வானூர்­தி­களை வேளாண் பணி­களில் ஈடு­ப­டுத்­தும் திட்­டத்தை பிர­த­மர் மோடி தொடங்கி வைத்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தின் சேலம் மாவட்­டம் உட்­பட, நாடு முழு­வ­தும் நூறு இடங்­களில் இத்­திட்­டம் செயல்­பாட்­டுக்கு வந்­துள்­ளது. விதை­கள், உரங்­கள், பூச்­சிக்­கொல்­லி­கள் ஆகி­ய­வற்றை தெளிப்­ப­தற்கு இந்த வானூர்­தி­கள் பயன்­ப­டுத்­தப்­படும்.

தொடக்க விழா­வில் பேசிய பிர­த­மர் மோடி, இப்­பு­திய திட்­டம் மூலம் மிகப்­பெ­ரிய அள­வில் வேலை வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­றும், கொள்­கை­கள் சரி­யாக இருந்­தால் நாடு எவ்­வ­ளவு உய­ரத்­தில் பறக்க முடி­யும் என்­ப­தற்கு இத்­திட்­டம் ஓர் எடுத்­துக்­காட்டு என்­றும் குறிப்­பிட்­டார்.

மத்தியப் பிரதேசம் இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய சாண எரிவாயு ஆலையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் குப்பை இல்லா நகரங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.