மின்னிலக்கப் பண மோசடி: ஏழு பேர் கைது

மின்னிலக்கப் பண மோசடி: ஏழு பேர் கைது

2 mins read
2faa71de-88ca-423e-ac06-77e6ab4d0960
மின்னிலக்கப் பணம். மாதிரிப் படம்: ஊடகம் -

இரண்டாயிரம் பேர் ஏமாந்தனர்; ரூ.40 கோடி சுருட்டல்

நாக்­பூர்: மின்­னி­லக்­கப் பணத்­தில் (கிரிப்டோ கரன்சி) முத­லீடு செய்யு­மாறு கூறி சுமார் 40 கோடி ரூபாய் மோசடி செய்­தது தொடர்­பாக ஏழு பேரை நாக்­பூர் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக ஏற்­கெ­னவே நான்கு பேர் கைதாகி இருந்­த­னர்.

உல­கம் முழு­வ­தும் மின்­னி­லக்­கப் பணப் பரி­மாற்­றம் தொடர்­பாக மாறு­பட்ட கருத்­து­கள் நிலவி வரு­கின்­றன. சில நாடு­கள் கிரிப்டோ கரன்­சிக்குத் தடை­வி­தித்­துள்ள நிலை­யில், இந்­தி­யா­வில் இந்த வகை பணத்­துக்கு வரி விதிக்­கப்­பட உள்­ளது. இந்­நி­லை­யில் மின்­னி­லக்கப் பணம் தொடர்­பா­கப் பல்­வேறு மோசடி வேலை­கள் நடந்து வரு­கின்­றன.

மகா­ராஷ்­டிர மாநி­லம், நாக்­பூ­ரில் சுமார் இரண்­டா­யி­ரம் பேரை மின்­னி­லக்­கப் பணத்­தில் முத­லீடு செய்யு­மாறு ஒரு கும்­பல் தூண்­டி­விட்டு மோசடி செய்­துள்­ளது.

இந்த மோச­டி­யின் மூளை­யா­கச் செயல்­பட்­ட­தா­கக் கரு­தப்­படும் நிஷித் வாஸ்­னிக்­ என்பவரும் அவ­ரது மனைவி­யும் இரு தினங்­க­ளுக்கு முன்­னர் கைதா­கி­னர். பின்­னர் அவர்­க­ளு­டைய கூட்­டா­ளி­கள் இரு­வ­ரும் சிக்­கி­னர்.

இப்­போது மேலும் ஏழு பேர் சுற்றி வளைக்­கப்­பட்­டதை அடுத்து, கைதா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 11ஆக கூடி­யுள்­ளது.

இவர்­கள் மீது இந்­திய தண்­ட­னைச் சட்­டம், மகா­ராஷ்­டிரா முத­லீட்­டா­ளர்­கள் நலன் பாது­காப்­புச் சட்­டம், தக­வல் தொழில்­நுட்­பச் சட்ட விதி­க­ளின் கீழ் வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

தம்மை பெரிய நிறு­வ­னத்­தின் நிர்­வா­கி­யைப் போல் காட்­டிக்­கொண்டு ஆடம்­ப­ர­மாக வலம் வந்த நிஷித் வாஸ்­னிக், மின்­னி­லக்கப் பணத்தைக் கையா­ளும் குறிப்­பிட்ட நிறு­வ­னம் ஒன்­றில் பலரை முத­லீடு செய்­யும்­படி தூண்­டி­விட்­டுள்­ளார்.

மேலும், முதலீடுகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்குப் பல தந்திரங்களையும் கையாண்டுள்ளார்.

நிறுவனத்தின் மீது செய்யப்பட்ட முதலீடுகளின் மூலம் திரண்ட பணத்தை நிஷித் வாஸ்னிக் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகவும் கடந்த 2017 முதல் 2021 வரை அவர் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டதாகவும் கூறப் படுகிறது.

பல கோடி ரூபாயை இவ்­வாறு சுருட்­டிய பின்­னர் சில மாதங்­க­ளுக்கு முன்பு, திடீ­ரென மாய­மா­னார் நிஷித். இதை­ய­டுத்து, அவ­ரைப் பிடிக்க தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டன. தீவிர தேடு­தல் வேட்டை நடை­பெற்று வந்­தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் புனே மாவட்டத்தில் இருப்ப தாகத் தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.