லாலுவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை

லாலுவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை

1 mins read
40cc0c08-2c86-431d-a2b0-06a4d951e6de
-

பாட்னா: மாட்­டுத் தீவன ஊழல் வழக்­கில் பீகார் முன்­னாள் முதல்­வர் லாலு பிர­சாத் யாத­வுக்கு ஐந்தாண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் அவ­ரது ராஷ்­டி­ரிய ஜனதா தளம் கட்­சி­யி­னர் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.

கடந்த 1990 முதல் 1997ஆம் ஆண்டு வரை பீகார் முதல்­வ­ராக பதவி வகித்­த­போது, கால்­ந­டை­களுக்குத் தீவ­னம் வாங்­கி­ய­தாகக் கூறி ரூ.950 கோடி பணத்தை அர­சுக் கரு­வூ­லத்­தில் இருந்து எடுத்து மோசடி நடந்­தி­ருப்­ப­தா­கப் புகார் எழுந்­தது.

இந்­நி­லை­யில் பீகார் அர­சின் டோரண்டா கரு­வூ­லத்­தில் இருந்து ரு. 139 கோடி பணத்தை முறை­கே­டாக எடுத்த வழக்­கில் ராஞ்சி நீதி­மன்­றம் லாலு பிரசாத்தை குற்­ற­வாளி என அறி­வித்தது. கடந்த மாதம் இந்த வழக்­கில் 75 பேர் குற்­ற­வாளிகளாக அறி­விக்­கப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து நேற்று தண்­டனை விவ­ரங்­கள் அறி­விக்­கப்­பட்­டன.

அதன்­படி லாலு பிர­சாத் யாத­வுக்கு ஐந்­தாண்டு சிறைத்­தண்­ட­னை­யும் 60 லட்­சம் ரூபாய் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.