மாயாவதி: ஆட்சி மாற்றம் அவசியம்

மாயாவதி: ஆட்சி மாற்றம் அவசியம்

1 mins read
42f46507-e6ce-43bc-a229-daed040cf538
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேசத்­தில் நடப்பு ஆளுங்­கட்­சி­யின் அனைத்து வகை­யான ஏமாற்று வேலை­களில் இருந்து மக்­கள் விடு­பட ஆட்சி மாற்­ற­ம் அவ­சி­யம் என பகு­ஜன் சமாஜ் கட்­சித் தலை­வர் மாயா­வதி தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், ஆளுங்­கட்­சி­யி­ன­ரின் தவ­றான கொள்கை­களால் அம்­மா­நி­லத்­தில் ஏழை­கள் மேலும் ஏழை­க­ளாகி வரு­வ­தா­கச் சாடி உள்­ளார்.

இத்­த­கைய சூழ­லில் உத்­த­ரப் பிர­தேச மக்­கள் பகு­ஜன் சமாஜ் கட்சி அளித்த வாக்­கு­று­தி­கள் மீது முழு நம்­பிக்கை வைப்­ப­து­தான் சரி­யான முடி­வாக இருக்­கும் என்று குறிப்­பிட்­டுள்ள மாயா­வதி, ஏழை­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அளிப்­ப­தற்குப் பதி­லாக, ஏற்கெ­னவே இருந்த வேலை­களும் பறிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

எனவே மாநி­லத்­தில் உள்ள அனைத்து ஏழை மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­துக்கு வழி­வகை செய்­வதற்­கு­த்தான் இப்­போது முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும் என்­றும் ஆட்சி மாற்­றம் ஏற்­பட வேண்­டும் எனில் அனை­வ­ரும் வாக்­க­ளிக்க வேண்­டும் என்­றும் மாயா­வதி மேலும் கூறி­யுள்­ளார்.