18 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த 67 வயது ஆடவர்

18 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த 67 வயது ஆடவர்

1 mins read
e0bc6038-6b0e-4f4e-95ab-ab418880800a
-

புவனேஸ்வர்: மருத்­து­வர் என்று கூறி, 18 பெண்­க­ளைத் திரு­ம­ணம் செய்­து­கொண்டு, அவர்­களை ஏமாற்­றிய ஆட­வரை காவல்­துறை கைது­செய்­துள்­ளது.

திரு­மண இணை­யத்­த­ளங்­களில் 51 வய­தான மருத்­து­வர் போல் நடித்து, நல்ல வேலை­பார்க்­கும் பெண்­களைக் குறி­வைத்து ஏமாற்றி கல்­யா­ணம் செய்­து­கொண்­டார் பிபு பிர­கா‌ஷ் என்­ப­வர். ஆனால் அவர் 67 வய­தா­ன­வர் என்று கூறப்­ப­டு­கிறது.

அவர் மணந்த பெண்­களில் நிபு­ணர்­கள், வழக்­க­றி­ஞர்­கள், மருத்­து­வர்­கள், ஒரு ராணுவ அதி­கா­ரி­யும் அடங்­கு­வர்.

போலி அடை­யாள அட்­டை­களைப் பயன்­ப­டுத்­தி­ய­தோடு, தாம் கைநிறைய சம்­ப­ளம் எடுப்­ப­தா­க­வும் பொய் சொல்லி அவர் பெண்­களை ஏமாற்­றி­னார்.

மணம் முடிந்த சில நாட்­களில், சாக்­குப்­போக்­குச் சொல்லி மனைவி­க­ளி­ட­மி­ருந்து நகை, பணத்தைப் பறித்­து­கொண்டு பிர­கா‌ஷ் ஓட்­டம் பிடித்து­வி­டு­வார் என்று காவல் துறை சொன்­னது.

பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த பெண்­களை அவர் ஏமாற்­றி­ய­தா­கக் காவல் துறை கூறி­யது.

அதற்கு அடை­யா­ள­மாக பிர­கா­‌ஷின் கைத்­தொ­லை­பே­சி­யில் 'மேடம் டில்லி', 'மேடம் அசாம்', 'மேடம் உத்­த­ரப் பிரே­த­சம்' என பெண்­க­ளின் கைப்­பேசி எண்­கள் சேமிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

10 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த குறைந்­தது 27 பெண்­களை அவர் திரு­ம­ணம் செய்­தி­ருக்­கக்­கூ­டும் என இந்­திய நாளி­தழ் ஒன்று குறிப்­பிட்­டது.

ஒடி­சா­வைச் சேர்ந்த பிர­கா‌ஷ் முதன்­மு­த­லாக 1978ஆம் ஆண்டு கல்­யா­ணம் புரிந்­து­கொண்­ட­தா­க­வும் முதல் மனை­வி­யு­டன் அவ­ருக்கு மூன்று பிள்­ளை­கள் இருப்­ப­தா­க­வும் கூறப்­பட்­டது.

பிர­கா­‌ஷின் சதி வலை­யில் வேறு சில­ருக்­கும் பங்­கு இ­ருப்­ப­தா­கக் காவல் துறை சந்­தே­கிக்­கிறது.