புவனேஸ்வர்: ஒடிசாவில் உயர் போலிஸ் அதிகாரி உட்பட லஞ்சம், ஊழல் விவகாரங்களில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரிநாத் மிஸ்ரா, ஏறத்தாழ ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்ததாகவும், தனது வருவாயை மீறி சொத்துக்குவிப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறையால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இதன் மூலம், 2019 முதல் ஒடிசாவில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. இம்மாதம் 16ஆம் தேதியன்று ஊழல், திறமையின்மை குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு மாநில அரசு கட்டாய ஓய்வு கொடுத்தது.
ஆனால் இவர்களுக்கான, ஓய்வுக்குப் பிந்திய நிதி ஆதாரங்களையும் பிடுங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற
னர்.

