மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் இருளில் மூழ்கிய சண்டிகர்

1 mins read
49cfecd2-17c5-432b-9f53-7d5d050d0a25
-

சண்­டி­கர்: சண்­டி­கர் மின்­வா­ரிய ஊழி­யர்­கள் கடந்த மூன்று நாள்க­ளாக வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். அத­னை­ய­டுத்து சண்­டி­கர் மக்­கள் இரு­ளில் தவித்து வரு­கின்­ற­னர்.

அங்­குள்ள மின்­வா­ரி­யக் கழ­கத்­தைத் தனி­யார் மய­மாக்­கும் அர­சின் திட்­டத்­தைக் கண்­டித்து ஊழி­யர்­கள் கடந்த திங்­கள்கிழமை போராட்­டத்­தில் குதித்­த­னர்.

மின் இணைப்­பு­கள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன. இத­னால் வீடு­களில் மக்­கள் இரு­ளில் தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. மின்­சா­ரத் தடையை அடுத்து சண்­டி­க­ரின் பல இடங்­களில் தண்­ணீர் விநி­யோ­க­மும் தடை­பட்­டுள்­ளது.

கொவிட் சூழ­லால் வீடு­களில் தங்கி வேலை பார்ப்­போ­ரும் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்­குள்ள பல மருத்­து­வ­ம­னை­கள் ஜென­ரேட்­டர் மூலம் மின்­சா­ரத்­தைப் பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் சண்­டி­க­ரில் மின்­வா­ரிய ஊழி­யர்­கள் வரும் 6 மாதங்­க­ளுக்கு எந்­த­வொரு போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­தற்கு, மத்­திய அர­சின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் அந்­ந­க­ரின் நிர்­வா­கம் தடை விதித்­துள்­ளது.

சாலை­களில் போக்­கு­வ­ரத்து சமிக்ஞை விளக்­கு­கள் இயங்­கா­த­தால் போக்­கு­வ­ரத்து கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் கடந்த மூன்று நாள்­க­ளாக சண்­டி­க­ரில் பொது­மக்­கள் மின்­சா­ரம், குடி­நீர் வசதி இல்­லா­மல் தவித்து வரு­கின்­ற­னர்.

இந்­தப் போராட்­டத்தை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு அரசு தரப்­பில் இது­வரை நடத்­திய பேச்சு­வார்த்தை அனைத்­தும் தோல்­வி­யில் முடிந்­து­விட்­டன.

இந்த நிலை­யில் பஞ்­சாப், அரி­யானா நீதி­மன்­றம், இது குறித்து விசாரிக்க இருதரப்பினரும் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.