மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது

மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது

2 mins read
21d785f0-7acf-499e-86ec-8705f1dd4110
-

மும்பை: மகா­ராஷ்­டிர மாநில அமைச்­சர் நவாப் மாலிக்கை (படம்), அம­லாக்­கத் துறை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

சட்ட விரோ­தப் பணப் பரி­மாற்ற வழக்கு தொடர்­பில் அவ­ரி­டம் பல மணி நேரம் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது.

நேற்று காலை 6 மணி அள­வில், மும்­பை­யில் உள்ள அமைச்­சர் நவாப் மாலிக்­கின் வீட்­டிற்கு, சட்ட விரோ­தப் பணப் பரி­மாற்ற வழக்கு தொடர்­பாக விசா­ரிக்க, அம­லாக்­கத் துறை அதி­கா­ரி­கள் வந்­த­னர். அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் விசா­ரணை நடத்­திய அதி­கா­ரி­கள், மேற்­கொண்டு விசா­ரிக்க அவரை அம­லாக்­கத் துறை அலு­வ­ல­கத்­திற்கு அழைத்­துச் சென்­ற­னர். அங்கு அமைச்­சர் நவாப் மாலிக்­கி­டம் தொடர் விசா­ரணை நடை­பெற்­றது. விசா­ர­ணைக்கு அவர் ஒத்­து­ழைக்­க­வில்லை என­வும் அத­னால் அவர் கைது செய்­யப்­பட்­டார் என­வும் கூறப்­ப­டு­கிறது.

கைதுக்குப் பின்­னர், அமைச்­சர் நவாப் மாலிக் கூறு­கை­யில், "கைது செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம்; ஆனால் பயப்­பட மாட்­டேன். நாங்­கள் போராடி வெற்றி பெறு­வோம்" என்­றார்.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில், முத­ல­மைச்­சர் உத்­தவ் தாக்­கரே தலை­மை­யி­லான, சிவே­சனா - காங்­கி­ரஸ் - தேசி­ய­வாத காங்­கி­ரஸ் ஆகிய கட்­சி­க­ளின் கூட்­டணி ஆட்சி நடை­பெற்று வரு­கிறது. இந்­தக் கூட்­டணி அர­சுக்­கும், மத்­திய பாஜக அர­சுக்­கும் தொடக்­கத்­தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வரு­கிறது. ஒரு­வ­ரை­யொ­ரு­வர் குற்­றம் சாட்டி வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, மும்பை நிழல் உலக தாதா பயங்­க­ர­வாதி தாவூத் இப்­ரா­கிம் மற்­றும் அவ­ரது கூட்­டா­ளி­க­ளு­டன், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்சி மூத்­த தலை­வ­ரும், மகா­ராஷ்­டிர மாநில அமைச்­ச­ரு­மான நவாப் மாலிக், சட்ட விரோ­த­மாக பணப் பரி­மாற்­றம் செய்­த­தாக புகார் எழுந்­தது. இதே குற்­ற­சாட்டை, பாஜக மூத்­த தலை­வ­ரும், முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும், மகா­ராஷ்­டிர மாநில சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான தேவேந்­திர பட்­ன­வி­சும் கூறி இருந்­தார். ஆனால், இந்த குற்­றச்­சாட்டு எல்­லாம் அடிப்­படை ஆதா­ர­மற்­றவை என, மகா­ராஷ்­டிர மாநில அமைச்­சர் நவாப் மாலிக் மறுத்துவந்தார்.