புதுடில்லி: தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்தியாவை புதிய எரிசக்திக்கான தலைமை நாடாக மாற்றும் என்று உலகப் பணக்காரர் களில் ஒருவரும் தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
"தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்கள், புதிய எரிசக்திக்கான முன்னணி நாடாக இந்தியாவை மாற்றும். ஒரே இரவில் அது, நடந்து விடாது. நிலக்கரி, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை இன்னும் இருபது ஆண்டுகள் சார்ந்திருக்கும் நிலையே உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் இவற்றை சார்ந்திருக்கும் நிலையில்இருந்து வெளியேற வேண்டும். அப்போது தூய்மையான எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாகும். கடந்த 20 ஆண்டுகள் தகவல், தொழில் நுட்பத்தில் 'சூப்பர் பவர்' நாடாக இருந்த இந்தியா, அடுத்த இருபது ஆண்டுகளில் எரிசக்தி, உயிர்அறிவியலில் 'சூப்பர் பவர்' நாடாக மாறும். இதில் எனக்குச் சந்தேகமில்லை," என்று முகேஷ் கூறினார்.

