லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் மேடையில் ஏறி மளமளவென்று தோப்புக் கரணம் போட்ட காெணாளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது. ஆனால் கடும் கோபத்தில் உள்ள மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கவரும் போலி நாடகம் இது என்று காங்கிரஸ் கட்சி கிண்டலடித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பூபேஷ் செளபே, சோன்பஹ்தர் மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இேத தொகுதியில் இவர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், கடந்த ஐந்து வருடமாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் அதிருப்தியுடனும் கோபத்துடனும் இருப்பதை அறிந்து வித்தியாசமான பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
தனது தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரசாரக் கூட்டத்தில் ேமடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த செளபே, திடீரென எழுந்து நாற்காலியில் ஏறி தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார்.
இது குறித்து பின்னர் பேசிய செளபே, "கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றாவிட்டால், தவறு செய்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். இதனால்தான் தோப்புக்கரணம் போட்டேன்," என்று கூறியுள்ளார்.
இவரது இந்தச் செயலை மக்களை ஏமாற்றும் நாடகம்," என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

