219 பேருடன் புறப்பட்டது இந்திய விமானம்

219 பேருடன் புறப்பட்டது இந்திய விமானம்

2 mins read
03930b0a-3efc-4117-bddc-695d3354d066
உக்ரேனில் சிக்கித் தவிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பத்திரமாக மீட்டுத் தரும்படி கோரி, புதுடெல்லியில் உள்ள ர‌‌ஷ்யத் தூதரகத்தின் முன்பு 15 முதல் 20 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றதாகவும் காவல்துறையினர் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ் -

பூக்கரெஸ்ட்: உக்­ரே­னில் சிக்­கித் தவித்த 219 இந்­தி­யர்­க­ளு­டன் ருமே­னி­யா­வில் இருந்து ஏர் இந்­தியா விமானம் நேற்று மாலை கிளம்பியது.

ர‌ஷ்­யா­வின் தாக்­கு­த­லைத் தொடர்ந்து உக்­ரேன் தனது வான் எல்­லை­களை மூடி­ய­தால், அண்டை நாடு­கள் வழி­யாக உக்­ரே­னில் உள்ள இந்­தி­யர்­களை மீட்க அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­னர்.

சாலை வழியாக உக்­ரேன்-ருமே­னியா எல்­லையைச் சென்­ற­டைந்த இந்­தி­யர்­கள், அதி­கா­ரி­கள் மூலம் ருமே­னி­யா­வில் உள்ள பூக்கரெஸ்ட் நக­ரத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

அங்­கி­ருந்து ஏர் இந்­தியா விமானத்­தில் புறப்­பட்ட இவர்­கள், இந்­திய நேரப்­படி நேற்று இரவு

8 மணி­ய­ள­வில் அந்­நாட்­டின் மும்பை நக­ரில் வந்­தி­றங்­கு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவர்­களில் பெரும்­பா­லா­னோர் மாண­வர்­கள் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

கிட்­டத்­தட்ட 250 பேரு­டன் ஹங்­கே­ரி­யில் இருந்து புறப்­படும் மற்­றொரு விமா­னம் இன்று காலை டெல்­லி­யில் தரை­யி­றங்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, உக்­ரே­னில் உள்ள இந்­தி­யர்­கள் அங்­குள்ள இந்­தியத் தூத­ர­கத்­தின் அறி­வு­றுத்­தல் இல்­லா­மல் நாட்­டின் எல்­லைப் பகு­தி­க­ளுக்குச் சென்­று­விட வேண்­டாம் எனக் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டுள்­ள­னர்.

உக்­ரே­னில் கிட்­டத்­தட்ட 20,000 இந்­தி­யர்­கள் உள்­ள­தா­க­வும் அவர்­களில் 4,000 பேர் கடந்த சில நாள்­களில் நாடு திரும்­பி­ய­தா­க­வும் இந்­திய வெளி­யு­றவு அமைச்சு கூறி­ உள்­ளது.

இந்­தியா புறக்­க­ணிப்பு

இதற்­கி­டையே, உக்­ரேன் மீது ர‌ஷ்யா தாக்­கு­தல் நடத்­து­வ­தற்கு கண்­ட­னம் தெரி­விக்­கும் தீர்­மா­னம் ஐநா பாது­காப்­புக் கவுன்­சி­லில் தோல்­வி­ய­டைந்­தது.

மொத்­த­முள்ள 15 நாடு­களில் தீர்­மா­னத்தை ஆத­ரித்து 11 நாடு­கள் வாக்­க­ளித்­துள்­ளது. ர‌ஷ்யா வீட்டோவைப் பயன்படுத்தி தோற் கடித்தது. இந்­தியா, சீனா, ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு ஆகிய மூன்று நாடு­கள் தீர்­மா­னத்­தில் பங்­கேற்­கா­மல் புறக்­க­ணித்­தன. இத­னால் அமெ­ரிக்­கா­வின் தீர்­மா­னம் தோல்­வி­அடைந்­த­தாக ஐநா அறி­வித்­தது.

நடு­நி­லையைப் பேணு­வ­தால், ர‌ஷ்யா­வுக்கு எதி­ரான தீர்­மா­னத்­தின் மீது வாக்­க­ளிக்­க­வில்லை என இந்­தியத் தரப்­பில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், பிரிட்­ட­னில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வி­ருக்­கும் பல நாடு­கள் பங்­கேற்­க­வுள்ள 'கோப்ரா வாரி­யர்ஸ்' எனும் போர் விமா­னப் பயிற்­சி­யில் இந்­திய விமா­னங்­கள் பங்­கேற்­காது என இந்­திய விமா­னப் படை அறி­வித்­துள்­ளது.

இப்­ப­யிற்சி மார்ச் 6 முதல் 27 வரை பிரிட்­ட­னி­லுள்ள வேடிங்­ட­னில் நடை­பெ­று­கிறது. இதில் 5 போர் விமா­னங்­கள் பங்­கேற்­கும் என இந்­திய விமா­னப் படை முன்பு அறி­வித்­தி­ருந்­தது.

கார­ணத்­தைக் குறிப்­பிட்டு கூறா­த­போ­தி­லும், உக்­ரேன் மீது ர‌ஷ்யா மேற்­கொண்­டுள்ள ராணு­வத் தாக்­கு­தல், அது­தொ­டர்­பான நிகழ்­வு­களே இந்த முடி­வுக்­கான கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்று கரு­தப்­ப­டு­கிறது.