20,000 பேரை மீட்க முன்னுரிமை

2 mins read
102d7518-40ff-4dad-bd7d-91e24af22afc
உக்ரேனிலிருந்து சிறப்பு விமானம் மூலமாக சென்னை திரும்பியோரை ஆரத் தழுவி வரவேற்ற உறவுகள். ருமேனியாவின் பூக்கரெஸ்ட்டில் இருந்து இன்னொரு விமானம் நேற்று மாலை இந்தியா திரும்பியது. ஹங்கேரியின் புடாபெஸ்ட்டுக்கு மேலும் இரு விமானங்கள் சென்றுள்ளன. படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

அச்சத்தில் உக்ரேனில் தொழில்செய்யும் இந்தியர்கள்; நாடு திரும்புவோருக்கு வேலைவாய்ப்பு

புது­டெல்லி: உக்­ரேன்­மீது ரஷ்யா போர் தொடுத்­துள்ள நிலை­யில், உக்­ரே­னில் உள்ள 20,000 இந்­தி­யர்­க­ளைப் பாது­காப்­பாக மீட்­டுக்­கொண்­டு­வர முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்று இந்­திய வெளி­யு­றவு இணை­ய­மைச்­சர் வி.முர­ளி­த­ரன் தெரி­வித்­துள்­ளார்.

"உக்­ரே­னில் 18,000க்கும் மேற்­பட்ட இந்­திய மாண­வர்­கள் பயின்று வரு­கின்­ற­னர். மேலும் 2,000 பேர் அங்கு வேலை­செய்து வரு­கின்­ற­னர். கூடிய விரைவில் அவர்களை மீட்டு, இந்தியாவிற்கு அழைத்துவர முன்னுரிமை அளித்து வருகிறோம். இது மிகப் பெரிய பணி," என்று திரு முரளி கூறினார்.

இது­வரை 4,000 மாண­வர்­களை அங்­கி­ருந்து வெளி­யேற்றி, பாது­காப்­பாக மீட்­டுள்­ள­தாக அவர் குறிப்பிட்டார்.

"எஞ்­சி­யுள்ள 16,000 இந்­தி­யர்­களில் கிட்­டத்­தட்ட 2,000 பேர் போலந்து, ருமே­னிய எல்­லை­களை அடைந்­து­விட்­ட­னர். இன்­னும் ஒரு சில நாள்­களில் அவர்­களை இந்­தியா அழைத்து வரு­வோம்," என்­றார் திரு முரளி.

கிழக்கு மற்­றும் மேற்கு உக்­ரே­னில் உள்ள மாண­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­து­வ­ரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

உக்­ரேன் மாண­வர் எண்­ணிக்­கை­யில் 25 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேல் இந்­தி­யர்­கள்­தான் என்று அந்­நாட்­டின் கல்வி, அறி­வி­யல் அமைச்­சின் இணை­யத்­த­ளம் கூறு­கிறது.

இத­னி­டையே, உக்­ரே­னில் நடக்­கும் சண்­டை­யால் அங்கு தொழில்­செய்து வரும் இந்­தி­யர்­கள் பலர் வேலை இழந்­து­வி­டு­வோமோ என்ற அச்­சத்­தில் உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், அங்­கி­ருந்து நாடு திரும்­பும் இந்­தி­யர்­கள் பிர­த­ம­ரின் 'ஸ்வ­தேஷ்' திட்­டத்­தின்­கீழ் வேலை தேடிக்­கொள்­ள­லாம் என்று இணை அமைச்­சர் முரளி தெரி­வித்­த­தாக 'நியூஸ்18' செய்தி கூறு­கிறது.

'வந்தே பாரத்' சிறப்பு விமா­னங்­கள் மூல­மாக நாடு திரும்­பும் இந்­தி­யர்­க­ளுக்கு, அவர்­க­ளின் தேர்ச்சிக்கு ஏற்ற வேலை­வாய்ப்­பு­களை வழங்­கு­வதே 'ஸ்வ­தேஷ்' திட்­டத்­தின் நோக்­கம்.

இத­னி­டையே, உக்­ரே­னில் சிக்கி இருக்­கும் இந்­தி­யர்­கள் அனை­வரை­யும் பாது­காப்­பாக மீட்டு வரு­வோம் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், உக்­ரே­னி­லி­ருந்து இந்­தி­யர்­களை மீட்­டு­வ­ரு­வ­தற்­கான செல­வு­கள் அனைத்­தை­யும் அர­சாங்­கமே ஏற்­கும் என்று தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் கூறி­யுள்­ளார். இந்­தி­யர்­களை விரைந்து மீட்க ஏது­வாக, உக்­ரே­னின் அண்டை நாடு­க­ளுக்கு அதி­க­மான விமா­னங்­களை இயக்க முடி­வு­செய்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் சொன்னார்.