பெருமிதத்துடன் தாய்மொழியில் பேச பிரதமர் மோடி வலியுறுத்து

2 mins read
2aee43d0-eb18-4486-8874-e3265a57ceb2
-

புது­டெல்லி: இம்­மா­தம் 21ஆம் தேதி உல­கத் தாய்­மொழி நாள் கொண்­டா­டப்­பட்ட நிலை­யில், இந்­திய மக்­கள் அனை­வ­ரும் பெரு­மி­தத்­து­டன் தங்­கள் தாய்­மொ­ழி­யில் பேச வேண்­டும் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

உல­கின் தொன்­மை­யான மொழி­யா­கத் தமிழ் விளங்­கு­வதை அவர் குறிப்­பிட்­டார்.

"நம் தாய்­மொ­ழி­யில் நாம் பெரு­மி­தத்­து­டன் பேச வேண்­டும். ஒப்­பிட முடி­யாத அள­விற்கு இந்­தியா மொழிச் செழுமை கொண்­டது. காஷ்­மீர் முதல் கன்­னி­யா­கு­ம­ரி­வரை, கட்ச் முதல் கொகி­மா­வரை நூற்­றுக்­க­ணக்­கான மொழி­க­ளை­யும் ஆயி­ரக்­க­ணக்கான வட்­டார வழக்கு­க­ளை­யும் தன்­ன­கத்தே கொண்டு இந்­தியா பேர­ழ­கு­டன் மிளிர்­கிறது. அவை ஒன்­றுக்­கொன்று வேறு­பட்­டவை என்­றா­லும் பரஸ்­ப­ரம் ஒருங்­கி­ணைந்­தவை. பல மொழி­க­ளா­னா­லும் ஒரே உணர்வு. நூற்­றாண்­டு­க­ளாக, ஒன்­றி­லி­ருந்து ஒன்று கற்­றுக்­கொண்­டும், செம்­மைப்­ப­டுத்­திக்­கொண்டு, ஒன்­றை­யொன்று வளர்த்­துக்­கொண்­டும் செழு­மை­யு­டன் திகழ்ந்து வரு­கின்­றன," என்று பிர­த­மர் மோடி விளக்­க­மா­கக் கூறி­னார்.

வானொ­லி­யில் நேற்று 86வது முறை­யாக 'மனத்­தின் குரல்' நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றி­ய­போது அவர் இவ்­வாறு பேசி­னார்.

"தாயும் தாய்­மொ­ழி­யும் நம் வாழ்­விற்கு நிரந்­தர அடித்­த­ளத்தை அமைத்­துத் தரு­கின்­றனர். தாயை எப்­ப­டிக் கைவிட மாட்­டோமோ, அதே­போல நம் தாய்­மொ­ழி­யை­யும் விட்­டு­வி­டக்­கூ­டாது," என்­றார் திரு மோடி.

உல­கின் ­தொன்மையான தமிழ் மொழி இந்­தி­யா­வில் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், இத்­த­கைய புகழ்­மிக்க மர­பைக் கொண்­டி­ருப்­பதை நினைத்து ஒவ்­வோர் இந்­தி­ய­ரும் பெரு­மைப்­பட வேண்­டும் என்­றும் சொன்­னார்.

இந்­தி­யா­வில் 121 தாய்­மொழி வடி­வங்­கள் இருப்­ப­தா­க­வும் அவற்­றுள் 14 மொழி­களை ஒரு கோடிக்­கும் மேற்­பட்­டோர் பேசு­வ­தா­க­வும் பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டார்.

இதனிடையே, கடந்த காலங்­களில் இந்­தி­யா­வில் இருந்து சிலை­கள் கடத்­தப்­பட்டு, வெளி­நா­டு­களில் விற்­கப்­பட்ட நிலை­யில், சென்ற 2014ஆம் ஆண்­டிலிருந்து 200க்கும் மேற்­பட்ட சிலை­களை இந்­தியா மீட்­டுவந்துள்ளதாகவும் அவர் தெரி­வித்­தார். அவற்­றுள் சில­வற்றை மீட்க அமெ­ரிக்கா, கனடா, ஹாலந்து போன்ற நாடு­கள் உத­வி­ய­தா­க­வும் பிர­த­மர் சொன்­னார். அவற்றை இந்­தி­யா­விற்கு மீட்­டு­வ­ரு­வது இந்­தி­யர்­க­ளின் கடமை என்­றும் அவர் கூறி­னார்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில், சில ஆண்­டு­க­ளுக்­கு­முன் பீகா­ரிலிருந்து கடத்­தப்­பட்ட, ஆயி­ரம் ஆண்­டுப் பழ­மை­யான அவ­லோ­கித்­தேஸ்­வர பத்­ம­பானி சிலை இத்­தா­லி­யி­ல் இருந்து மீட்­டுக் கொண்­டு­வ­ரப்­பட்டது குறிப்­பி­டத்­தக்­கது.