'எல்ஐசி'யில் 20 விழுக்காடு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி

'எல்ஐசி'யில் 20 விழுக்காடு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி

1 mins read
964ece8a-2f45-4624-af6b-83c0a190cda2
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் ஆகப் பெரிய காப்­பு­றுதி நிறு­வ­ன­மான 'ஆயுள் காப்­பு­றுதி நிறு­வ­னத்­தில் (எல்­ஐசி)' 20 விழுக்­காடு அந்­நிய நேரடி முத­லீட்­டிற்கு அந்நாட்டு அமைச்­ச­ரவை அனு­மதி அளித்­து இருக்கிறது.

உல­கி­லேயே மிகப் பெரிய மூன்­றா­வது காப்­பு­றுதி நிறு­வ­ன­மாக விளங்­கும், பொதுத் துறை நிறு­வ­ன­மான 'எல்­ஐசி'யில் 5% பங்­கு­களை விற்று, ரூ.78,000 கோடி திரட்ட மத்­திய அரசு முடி­வு­செய்­துள்­ளது. அதற்­கான வரைவு அறிக்­கை­யும் 'செபி' எனப்­படும் இந்­தி­யப் பங்­குச் சந்தை வாரி­யத்­தி­டம் தாக்­கல் செய்­யப்­பட்­டு­விட்­டது.

இந்­நி­லை­யில், 'எல்­ஐசி' பொதுப் பங்­கு­கள் விற்­ப­னை­யில் அந்­நிய நேரடி முத­லீட்­டிற்­கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்காக, அந்­நிய நேரடி முத­லீட்­டுக் கொள்­கை­களில் மாற்­றம் செய்யவும் மத்­திய அமைச்­சரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது,

இப்­போது நடப்­பி­லுள்ள அந்­நிய நேரடி முத­லீட்டு விதி­க­ளின்­படி, பொதுத்­துறை வங்­கி­களில் 20% வரை அந்­நிய நேரடி முத­லீட்டை அனு­ம­திக்­க­லாம். அந்த அடிப்­ப­டை­யில், 'எல்­ஐசி'யிலும் அந்­நிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்க முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

ஐந்து லட்­சம் கோடி ரூபாய்க்­கும் மேல் நிகர சொத்து மதிப்­பைக் கொண்ட 'எல்­ஐசி'யில் 100,000க்கும் மேற்­பட்­டோர் பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர்; 1.2 கோடிப் பேர் முக­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.