இறங்குமுகத்தில் தொற்று; ஒருநாள் பாதிப்பு 10,000க்கும் கீழ் பதிவானது

இறங்குமுகத்தில் தொற்று; ஒருநாள் பாதிப்பு 10,000க்கும் கீழ் பதிவானது

2 mins read
2a3f028b-8576-4c3f-b7f5-c704be0b20da
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தொற்று வேக­மாக குறைந்து வரு­கிறது. சுமார் இரண்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை பத்­தா­யிரத்­துக்­கும் கீழ் பதி­வாகி உள்­ளது.

நேற்று முன்­தி­னம் புதி­தாக 8,013 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யது. நாடு முழு­வ­தும் 119 பேர் தொற்­றுக்குப் பலி­யா­கி­விட்­ட­னர்.

பலி­யா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை ஐந்நூறு ஆயி­ரத்­தைத் தாண்­டி­யுள்­ளது.

தொற்­றில் இருந்து குண­ம­டைந்­தோர் விகி­தம் 98.56% ஆக உயர்ந்­துள்­ளது. உயி­ரி­ழந்­தோர் விகி­தம் 1.20% ஆக குறைந்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 102,601 பேருக்கு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

சனிக்­கி­ழமை அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை 10,273ஆகப் பதி­வாகி இருந்­தது.

இந்­நி­லை­யில், ஞாயிற்­றுக்­கிழமை இது 22 விழுக்­காடு குறைந்து, 8,013ஆகப் பதி­வா­னது.

இதற்­கி­டையே, டெல்­லி­யில் தொற்­றுப் பர­வல் கட்­டுக்­குள் வந்­ததை அடுத்து, அங்கு பல்­வேறு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

டெல்­லி­யில் இயக்­கப்­படும் மெட்ரோ ரயில்­களில் இனி பயணி­கள் நின்­ற­படி பய­ணம் செய்ய முடி­யும்.

முகக்­க­வ­சம் அணி­யா­மல் வெளியே செல்­வோ­ருக்கு விதிக்­கப்­பட்ட அப­ரா­தம் 2 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து ஐந்நூறு ரூபா­யாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­களில் ஏப்­ரல் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்­பு­கள் தொடங்­கப்­படும் என டெல்லி மாநில கல்­வித்­துறை அறி­வித்­துள்­ளது.

வெள்­ளிக்­கி­ழமை அன்று டெல்லி பேரி­டர் மேலாண்மை ஆணை­யத்­தின் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் திங்­கட்­கி­ழமை (நேற்று) முதல் கொரோனா கட்­டுப்­பா­டு­க­ளைத் தள்த்­து­வது என முடிவு செய்­யப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தனி­யார் வாக­னங்­களில் செல்­வோர் இனி­மேல் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மல்ல என்று டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார். எனி­னும், முகக்­க­வ­சம் அணி­தல், சமூக இடை­வெ­ளி­யைக் கடை­ப்பி­டித்­தல் ஆகி­ய­வற்­றைக் கடைப்­பி­டித்­தல் நல்­லது என்று அவர் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, கேர­ளா­வில் உள்ள திரை­ய­ரங்­கு­களில் நூறு விழுக்­காடு இருக்­கை­களை நிரப்ப அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து சரிந்து வரு­வதை அடுத்து, அங்கு கட்­டுப்­பாடு­கள் தளர்த்­தப்­பட்டு வரு­கின்­றன.

இதேபோல் மதுக்­கூ­டங்­களிலும் உண­வ­கங்­க­ளி­லும் நூறு விழுக்காடு இருக்­கை­களை நிரப்­ப­லாம் என அரசு தெரி­வித்­துள்­ளது. எனினும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது நல்லது என கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வெள்­ளிக்­கி­ழமை அன்று அங்கு 3,581 பேருக்கு புதி­தாக கிருமி தொற்றி­ய­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ளது.