அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவை: தடை நீடிப்பு

அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவை: தடை நீடிப்பு

1 mins read
4a9d9c1b-dca6-4ce0-a185-87dc048b2591
-

புது­டெல்லி: அனைத்­து­லகப் பயணி­கள் விமா­னச் சேவை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடை அடுத்த உத்­த­ரவு வரும்­வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக கடந்த ஜன­வரி 19ஆம் தேதி­யன்று இந்­தத் தடையை பிப்­ர­வரி 28ஆம் தேதி வரை நீட்­டிப்­ப­தாக மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­ககம் (டிஜி­சிஏ) அறி­வித்­தி­ருந்­தது.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக இந்­தி­யா­வில் இருந்து இயக்­கப்­படும் பய­ணி­க­ளுக்­கான அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் அனைத்­தும் கடந்த 2020 மார்ச் 23ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

எனி­னும் 'ஏர் பபல்' எனப்­படும் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான சில விதி­மு­றை­க­ளு­டன் கூடிய ஏற்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் 2020, ஜூலை தொடங்கி சிறப்பு விமா­னங்­கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது­வரை 45 நாடு­க­ளு­டன் இதற்­கான உடன்­பாடு செய்து கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், நேற்று வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், பயணி­களுக்­கான அனைத்­து­லக விமா­னச் சேவை­கள் அனைத்­தும் அடுத்த உத்­த­ரவு வரும் வரை நிறுத்தி வைக்­கப்­ப­டு­வ­தாக மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­க­கம் அறி­வித்­துள்­ளது.

எனி­னும், இந்த உத்­த­ரவு அனைத்­து­லக சரக்கு விமான சேவை­க­ளுக்­கும் ஏற்­கெ­னவே விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­க கத்தால் ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்ட விமா­னச் சேவை­க­ளுக்­கும் பொருந்­தாது என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.