இந்தியர்களை மீட்க விரையும் நான்கு மத்திய அமைச்சர்கள்

இந்தியர்களை மீட்க விரையும் நான்கு மத்திய அமைச்சர்கள்

1 mins read
ca2e0601-5f58-4250-9c99-40adb83b206f
உக்ரேன் எல்லையில் காத்துக் கிடக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள். படம்: ஊடகம் -

உக்ரேனின் அண்டை நாடுகளுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல்

புது­டெல்லி: உக்­ரே­னில் சிக்­கித் தவிக்­கும் இந்­தி­யர்­களை மீட்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வும் வகை­யில் நான்கு மூத்த அமைச்­சர்­களை உக்­ரே­னின் அண்டை நாடு­க­ளுக்கு அனுப்ப இந்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

உக்­ரே­னில் தற்­போது 16 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட இந்­தி­யர்­கள் சிக்கி உள்­ள­னர். அவர்­களை பத்­தி­ர­மாக மீட்­பது குறித்து பிர­த­மர் மோடி நேற்று முன்­தி­னம் தீவிர ஆலோ­சனை மேற்­கொண்­டார். அப்­போது, மீட்பு நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு வெளி­யு­றவு அதி­கா­ரி­க­ளுக்கு அவர் உத்­த­ர­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

மேலும், மூத்த அமைச்­சர்­கள் ஹர்­தீப் புரி, ஜோதி­ரா­தித்ய சிந்­தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகி­யோரை உக்­ரே­னின் அண்டை நாடு­க­ளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்­யப்­பட்­ட­தா­க­வும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

உக்­ரே­னில் சுமார் 76 ஆயி­ரம் வெளி­நாட்டு மாண­வர்­கள் உள்­ள­னர். அவர்­களில் நான்­கில் ஒரு பங்கு மாண­வர்­கள் இந்­தி­யா­வைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­களில் பெரும்­பா­லா­னோர் அங்கு மருத்­து­வம் சார்ந்த படிப்­பு­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

உக்­ரே­னின் அண்டை நாடு­க­ளான போலந்து, ருமே­னியா, ஸ்லோ­வாக்­கி­யா­வின் எல்­லைப் பகு­திக்கு மாண­வர்­கள் வந்­து­விட்­டால் அங்­கி­ருந்து அவர்­களை மீட்­டு­வி­ட­லாம் என இந்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

இதற்­கி­டையே உக்­ரேன், போலந்து எல்­லைப் பகு­தி­யில் சிக்கி­உள்ள மாண­வர்­கள், பத்­தி­ர­மாக எல்­லை­யைக் கடக்க பேருந்­து­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக போலந்­தில் உள்ள இந்­தியத் தூத­ர­கம் தெரி­வித்­துள்­ளது.