மூன்று விமானங்களில் மேலும் 630 இந்தியர்கள் நாடு திரும்பினர்

2 mins read
ad9b7118-e111-4755-8deb-03a9ff297f9f
இந்திய விமானப் படை விமானத்தில் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள். பிரதமர் மோடி, உக்ரேனிலிருந்து திரும்பிய சில மாணவர்களுடன் வியாழக்கிழமை அன்று உரையாடினார் படம்: இந்திய விமானப் படை/ டுவிட்டர் -

புது­டெல்லி: உக்­ரே­னி­லி­ருந்து மூன்று விமா­னங்­கள் மூலம் மேலும் 630 இந்­தி­யர்­கள் தாய் நா­டு திரும்பி உள்ளனர்.

'ஆப­ரே­ஷன் கங்கா' எனும் இந்­தி­யர் மீட்புத் திட்­டத்­தின் கீழ் வியாழன் இரவு முதல் நேற்று காலை வரை 'ஐஏ­எஃப் சி-17' மூன்று விமா­னப் படை விமா­னங்­களில் இந்­தி­யர்­கள் அழைத்து வரப்­பட்­ட­னர்.

அவர்­கள் அனை­வ­ரும் இந்­தி­யா­வில் உள்ள ஹின்­டன் விமா­னப் படைத் தளத்­தில் இறக்­கி­வி­டப்­பட்­ட­னர்.

ருமே­னியா, ஹங்­கே­ரி­யில் உள்ள தளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி உக்­ரேன் போரில் பாதிக்­கப்­பட்ட மொத்­தம் 630 குடி­மக்­கள் மூன்று விமா­னங்­களில் அழைத்து வரப்­பட்டதாக டுவிட்­டர் பதி­வில் இந்­திய விமானப் படை கூறியது.

மத்­திய அமைச்­சர் வி.கே. சிங், கடந்த மூன்று நாட்­களில் ஒவ்­வொரு விமா­னத்­தி­லும் ஏறக்­கு­றைய 200 பேரு­டன் ஏழு விமா­னங்­கள் இந்­தியா வந்துள்ளதாகக் கூறி­னார்.

சில மாணவர்கள் போலந்து தலைநகர் வார்சா வந்து சேர்ந்து உள்ளனர்.

அவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் சிவில் விமானப் போக்கு வரத்து துணை அமைச்சருமான வி.கே. சிங் தெரிவித்தார்.

இதுவரை சுமார் 9,000 இந்தி யர்கள் உக்ரேனிலிருந்து இந்தியா வுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் காயம்

உக்ரேன் தலைநகர் கியவ்வில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கியவ் நகரிலிருந்து வெளிேயறியபோது ஹர்ஜோத் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் உடனடி யாக கியவ் நகர மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதாகவும் இளையர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கெனவே கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் போரில் உயிரிழந் தார். இந்நிலையில் மற்றொரு மாணவர் காயம் அைடந்துள்ளார்.