29 பெண்களுக்கு அதிபர் விருது

1 mins read
ecfa4520-2cb4-4a27-b5ee-7774cc47562b
பெண் சக்தி விருது பெறும் பெண்­க­ளு­டன் உரை­யாடிய பிர­த­மர் நரேந்­திர மோடி. படம்: டுவிட்டர்/@ நரேந்திரமோடி -

புது­டெல்லி: உல­கம் முழு­வ­தும் அனைத்­து­லக மக­ளிர் தினம் நேற்று கொண்­டா­டப்­பட்­டது. இதை­யொட்டி 29 பெண்­க­ளுக்கு அதி­பர் ராம்­நாத் கோவிந்த் 'நாரி சக்தி புரஸ்­கார்' என்றழைக்கப்படும் பெண் சக்தி விரு­து­களை நேற்று வழங்கி கௌர­வித்­தார். இவர்­களில் தமி­ழ­கப் பெண்­கள் மூவர் அடங்­குவா்.

2020ஆம் ஆண்­டுக்­கான விருதை தமி­ழ­கத்­தின் கைவி­னைக் கலை­ஞ­ரான ஜெயா முத்து, தோடா கைப்­பின்­னல் (எம்­ப்­ராய்­டரி) கலைஞா் தேஜம்மா ஆகியோா் கூட்­டா­கப் பெற்றனர். 2021ஆம் ஆண்­டுக்­கான விரு­து­கள் பட்­டி­ய­லில் தமி­ழ­கத்­தைச் சோ்ந்த மன­நல மருத்­துவரும் ஆய்­வா­ள­ருமான தாரா ரங்­கஸ்­வாமியும் இடம்பெற்­றுள்ளாா்.

மக­ளிர் தினத்தை முன்­னிட்டு 2020-2021ஆம் ஆண்­டு­க­ளுக்­கான 28 பெண் சக்தி விரு­து­களை 29 பெண்­க­ளுக்கு அதிபர் ராம்­நாத் கோவிந்த் வழங்­கினார்.

தொழில்­துறை, விவ­சா­யம், கண்டு­பி­டிப்பு, சமூ­கப்­பணி, கல்வி, கலை, இலக்­கி­யம், அறி­வி­யல் உள்­ளிட்ட துறை­களில் அசா­தா­ரண பங்­க­ளிப்பை அளித்த பெண்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் அங்­கீ­கரிக்­கும் வகை­யில் இவ்விருது வழங்­கப்­ப­டு­கிறது. சமூக தொழில்­மு­னை­வா­ளர் அனிதா குப்தா, பழங்­கு­டி­யின செயல்­பாட்­டா­ளர் உஷா­பென் தினேஷ்­பாய் வாசவா, கண்­டு­பி­டிப்­பா­ளர் நசிரா அக்­தர், இன்­டெல்-இந்­தியா நிறு­வனத் தலைமை நிர்­வாகி நிவ்­ருதி ராய் உள்­ளிட்­டோர் பெண் சக்தி விருதுகளைப் பெற்றனர்.